ஜீவானந்தம் பற்றி ஜனனி சொன்ன வார்த்தையை கேட்டு கலங்கி நிற்கிறார் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நேற்று கதிர் குணசேகரன் எதிர்த்து கேள்வி கேட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நந்தினி ரேணுகா ஈஸ்வரி மற்றும் சக்தி ஆகியோர் கார்டனில் கூடியிருக்க ஜனனி வருத்தத்தோடு வீட்டுக்குள் நுழைகிறார்.
நேராக இவர்களிடம் வர நந்தினி இவ்வளவு நல்லது பண்றவர் எதுக்கு அவர் பேர்ல சொத்தை மாத்தி எழுதிக்கணும் என்று கேட்க ஏதோ ஒரு காரணம் இருக்கு அக்கா என்று ஜனனி சொல்கிறார்.
மேலும் ஜீவானந்தத்திற்கு இப்படி ஒரு பக்கம் இருக்கும்னு எனக்கு தெரியவே இல்லை அக்கா என கண்கலங்கும் ஜனனி அவரை சுட வந்தவங்க அவருடைய மனைவிய சுட்டுட்டாங்க என்று சொல்ல ஈஸ்வரியும் கலங்கி நிற்கிறார்.