அருண் காணாமல் போக குணசேகரனுக்கு ஜனனி டீம் இருக்கும் தகவல் தெரிய வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆதிரை காணாமல் போன நிலையில் குணசேகரன் தூக்கு போட போக ஒரு கட்டத்தில் விசாலாட்சி ஆதிரை, அருண் கல்யாணம் குறித்த விஷயத்தை போட்டுடைக்க ஜான்சி ராணி குணசேகரனை மிரட்டிய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
இது குறித்த ப்ரோமோ வீடியோவில் அருண் எங்கே என ஜனனி கௌதமுக்கு போன் செய்து கேட்க அவன் அருண் இன்னும் வரலையா? என்று கேட்க அருண் காணாமல் போன விஷயம் தெரிய வருகிறது.
மறுபக்கம் ஞானத்துக்கு ஜனனி டீம் முப்பாத்தம்மன் கோவிலில் இருப்பதாக தகவல்கள் கிடைக்க அவர் குணசேகரனிடம் சொல்லி விட்டு வேக வேகமாக கிளம்ப குணசேகரன் கரிகாலா கிளம்புடா என சொல்கிறார்.
இதனால் ஆதிரை கல்யாணம் யாருடன் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் எழுந்துள்ளது. இதற்கான விடை இன்றைய எபிசோடில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.