குணசேகரனின் சூழ்ச்சியால் ஆதிரையின் நிச்சயதார்த்தம் என்று போக விசாலாட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார் அப்பத்தா.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் குணசேகரன் அப்பத்தா தனக்கு எழுதி தருவதாக சொன்ன 40% ஷேரை எழுதி கொடுக்க சொல்லி நிச்சயத்தை நிறுத்தி வைக்க அப்பத்தா இப்போதைக்கு என்னுடைய சேரை எழுதிக் கொடுக்க முடியாது என உறுதியாக சொல்லிவிட்டார்.
இதனால் குணசேகரன் இந்த நிச்சயம் நடக்காது என உறுதியாக சொல்ல எஸ் கே ஆர் குடும்பம் அங்கிருந்து வெளியேறியது. இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது, விசாலாட்சி மனுஷங்களை நம்பி நம்பி ஏமாந்தது போதும் என கோபமடைய அப்பத்தா என்ன விசாலாட்சி பேசி முடிச்சிட்டியா என பதிலடி கொடுக்கிறார். ஜனனி சாருபாலா மேடமுக்கு போன் செய்து நான் ஜனனி பேசுறேன் என சொல்ல இன்னும் பேச என்ன இருக்கு ஜனனி என போனை கட் செய்கிறார்.
இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்ற திருப்பங்களுடன் இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.