ஈஸ்வரி ஜாமினில் வெளிய வர விசாலாட்சி ஜனனிக்கு வார்னிங் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் என் பொண்ணு இவ்வளவு தூரத்துக்கு கொடுமைப்படுத்தின இவ ஆத்தா காரி கிட்டவே வரக்கூடாது என்று நீதிபதியிடம் சொல்கிறார். எங்க அண்ணியை பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும் அவங்க அப்படி கிடையாது என்று கதிர் பதிலடி கொடுக்கிறார்.
அதைத் தொடர்ந்து ஜனனி பதறி அடித்து ஹாஸ்பிடல் ஓடி வர கதிர் அன்னிக்கு ஜாமீன் கிடைச்சிடுச்சா என்று கேட்க ஜனனியும் கிடைத்துவிட்டது என்று சொன்னதும் அதைக் கேட்ட குணசேகரன் என்னது ஜாமீன் கிடைச்சிருச்சா என்று அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு தர்ஷினியை வீட்டுக்கு கூட்டி வந்ததும் அங்கு வந்த ஜனனி உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் தர்ஷினி நீ வா என்று ஜனனி கூப்பிட போக விசாலாட்சி மேல கைய வச்ச அவ்வளவுதான் என வார்னிங் கொடுக்கிறார்.