குணசேகரனுக்கு எதிராக ஜனனி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் காசு அள்ளிவிட்டா கடை காரனே எடுத்து வந்து கொடுக்கப் போறான் என குணசேகரன் பேச அதுக்கு எதுக்கு எங்களை கடைக்கு அனுப்பனும் என ரேணுகா நறுக் என கேள்வி கேட்கிறார்.
அதனைத் தொடர்ந்து ஜனனி சொல்றதெல்லாம் தலையாட்டிக்கிட்டு செய்ய அடிமைகள் இருக்காங்கன்னு தான் அர்த்தம் என பதில் சொல்கிறார்.
பிறகு அருணை சந்தித்து நீங்க உண்மையாகவே ஆதரையை லவ் பண்றீங்களா என்ன கேட்டேன் அதான் அவ எல்லார் முன்னாடியும் கரிகாலனை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லிட்டு போயிட்டாளே என சொல்கிறார்.
அதன் பிறகு ஜனனி நான் தான் அப்படி சொல்ல சொன்னேன் என உண்மையை போட்டு உடைக்கிறார். இதனால் குணசேகரனுக்கு எதிராக ஜனனி போடும் திட்டம் என்ன என்பது குறித்து இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.