YouTube video

EPS Letter to Rajasthan and Odissa CM : இந்தியா முழுவதும் வரும் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது மக்கள் கூட்டமாக கூடங்கள் அவரவர் வீடுகளில் கொண்டாடிக் கொள்ளலாம் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் தீபாவளியின் போது நாட்டில் ஒரு சில மாநிலங்கள் குறிப்பாக ராஜஸ்தான் ஒடிசா ஆகிய மாநிலங்கள் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பைத் தடை செய்துள்ளது. அதற்கு காரணம் பட்டாசு வெடிப்பதால் கொரானா நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் தெரிவித்துள்ளது.

EPS Letter to Rajasthan and Odissa CM

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இது குறித்து பேசியுள்ளார். அதாவது பட்டாசுகள் வெடிப்பது நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்கும் வகையில்ஆதாரங்கள் அல்லது சரிபார்க்கப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவின் முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில், தீபாவளிக்கு தங்கள் மாநிலத்தில் ஏற்பட்ட தடையை மறுபரிசீலனை செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.