பிரபல விஜய் டிவி சீரியல் ஒன்று முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
End Card to Eeramana Rojave 2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே சீசன் 2. ஆரம்பத்தில் ட்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ரேட்டிங் குறைய தொடங்கியதால் நேரம் மாற்றம் செய்யப்பட்டது.
அப்போதும் சீரியலின் டிஆர்பியில் முன்னேற்றம் இல்லாத நிலையில் மதிய நேரத்திற்கு மாற்றப்பட்டது. இப்படியான நிலையில் தற்போது இந்த சீரியல் முடிவு வர இருப்பதாக பிரியாவாக நடித்து வரும் ஸ்வாதியின் பதிவு மறைமுகமாக தெரிவித்துள்ளது.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சம்திங் கம்ஸ் டூ எண்டு என பதிவு செய்துள்ளார். இதனால் புதிய சீரியல் களின் என்ட்ரியால் ஈரமான ரோஜாவே சீசன் 2 முடிவு வார இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.