Election Commissioner Resignation : தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக அசோக் லவாசா கடந்தமாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து தேர்தல் ஆணையர் பதவியை அவர் ராஜினாமா செய்வார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேபோன்று அசோக் லவாசா தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ளார். அதில் இம்மாத இறுதிக்குள் தன்னை விடு கோரி அவர் கூறியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக அவர் அடுத்த மாதம் பொறுப்பை ஏற்க உள்ளதாக தெரிகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்வது இது இரண்டாவது முறையாகும்.
வரும் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தலைமை தேர்தல் ஆணையராக அசோக் லவாசா பொறுப்பேற்க இருந்த குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஜினாமா கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,