Diwali : தீபாவளி பண்டிகை அன்று தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். எந்த 2 மணி நேரம் என்பதை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் நவம்பர் 6 – ஆம் தேதி தீபாவளி பண்டிகை. வழக்கமாக தீபாவளி அன்று அனைவரும் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடுவர்.
ஆனால், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுசூழல் பாதிப்படைவதாக புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், காற்று மாசுபாட்டை தடுக்கும் பொருட்டு, தீபாவளி அன்று இரவு 8 முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவு, பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும், சிரார்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழக அரசு அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறும், மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிக்குமாறும், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதனை விசாரித்த நீதிபதி, ” தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.
எந்த 2 மணி நேரத்தில் வெடி வெடிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டார்.