Director Hari Voice on Sathankulam Death
Director Hari Voice on Sathankulam Death

காவல் துறையை வைத்து பெருமையாக படம் எடுத்ததற்காக தான் வெட்கப்படுவதாக கூறியுள்ளார் இயக்குனர் ஹரி.

Director Hari Voice on Sathankulam Death : கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கூறிய நேரத்தை தாண்டி செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததால் தந்தை, மகன் இருவரை கைது செய்து சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் காவலர்கள் கொடுமையாக தாக்கியதால் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த கொடூர சம்பவத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஹரி இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சியான் 60 படத்திலும் தொடரும் தனுஷ் பட மேஜிக்.. வெளியானது அதிரடி அப்டேட்

அதில் சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்து விடக் கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே.

காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுதியுள்ளது.

காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன் என கூறியுள்ளார்.