பிரபல திரைப்பட இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்களின் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Director Durai Senthilkumar Father Death : கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வரும் இந்த காலகட்டத்தில் திரையுலகில் தொடர்ந்து பல்வேறு மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என அனைத்து துறைகளிலும் திடீரென உங்களின் பிரபலங்களின் மரணம் அனைவரையும் சோகத்தில் உள்ளாக்கி வருகிறது.
இந்திய சினிமாவின் முன்னணி பிரபல பின்னணிப் பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அதிலிருந்து மீண்டு இருந்த நிலையில் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இன்று தமிழ் திரைப்பட இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்களின் தந்தை செல்வராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவருக்கு தற்போது வயது 67 ஆகும். இவருடைய இறுதிச்சடங்கு இன்று அவரது சொந்த ஊரான கரூரில் நடைபெற உள்ளது.
தமிழ் திரையுலகில் தொடர்ந்து இதுபோன்ற அடுத்தடுத்து மரணங்கள் ஏற்பட்டு வருவது ரசிகர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.