பிகில் படத்தின் ஷோ ரத்து செய்யப்பட்டது ஏன்? என சம்மந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் பிகில். அட்லீ இயக்கத்தில் இப்படம் கடந்த தீபாவளி ரிலீசாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அப்படியான நிலையில் நேற்று போதுமான கூட்டம் இல்லாததால் சென்னையில் உள்ள தேவி தியேட்டரில் பிகில் திரைப்படத்தின் காட்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் ஒன்று வைரலானது.
அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார் அந்த தியேட்டரின் உரிமையாளர். இது குறித்து அவர் பிரபல டிவி சேனலுக்கு தொலைபேசி வழியாக கூறியதாவது
தேவி தியேட்டரில் இரண்டு ஸ்க்ரீனில் பிகில் திரைப்படம் ஓடுகிறது. ஒரு ஸ்க்ரீனில் 800 பேர் படம் பார்க்கலாம், இன்னொரு ஸ்க்ரீனில் 2000 பேர் படம் பார்க்கலாம்.
ஏற்கனவே பெரும்பாலான மக்கள் படம் பார்த்து விட்டதால் கூட்டம் குறைந்துள்ளது, இது ஒரு புறம் இருந்தாலும் சென்னை மழையும் இன்னொரு புறம் காரணம் தான்.
இரண்டு ஸ்க்ரீனில் 15 நிமிட இடைவெளியில் தான் படம் போடப்பட்டது. அதனால் தான் ஒரு ஸ்க்ரீனில் ரத்து செய்தோம். இன்னொரு ஸ்க்ரீனில் படம் ஓடியது.
மேலும் அடுத்த காட்சியே இரண்டு ஸ்க்ரீனிலும் நல்ல கூட்டத்துடன் ஓடியது எனவும் கூறியுள்ளார். இதே போல் உதயம் தியேட்டரிலும் கைதி படத்தின் காட்சி ஒன்று ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.