ஒரு முறை இரண்டு முறை தான் காதல் வருமா என்ன என ரசிகரின் கேள்விக்கு தொகுப்பாளினி டிடி பதில் அளித்துள்ளார்.
DD Live Chat With Fans : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த ஒரே வருடத்தில் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார்.
தற்போது மீண்டும் விஜய் டிவி நடுவராகவும் தொகுப்பாளராகவும் பங்கேற்று வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் லைவ்வாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த போது உங்களின் முதல் திருமண வாழ்க்கை தற்போதைய வாழ்க்கையை பாதிக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு டிடி இல்லவே இல்லை. முடிந்து போனதை திரும்ப திரும்பி பார்க்கக் கூடாது சென்று கொண்டே இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் இரண்டாவது காதல் மீது நம்பிக்கை உள்ளதா என இன்னொருவர் கேட்க முதல் காதல் இரண்டாவது காதல் என என்ன இருக்கிறது? காதல் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. அது எத்தனை முறை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரும். ஆனால் ஒரே நேரத்தில் நான்கு ஐந்து பேரை காதலிப்பது தான் தவறு என பதிலளித்துள்ளார்.