![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2020/07/835974-24sino-india-696x482.jpg)
China and India Fight in Border : கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் 20 பேரின் பெயர்கள் புதுடெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பொறிக்கப்பட உள்ளதாக ராணுவ அதிகாரி எம்.எம். நரவனே தெரிவித்துள்ளார்.
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே கடந்த ஜூன் 15ஆம் தேதி பலமணிநேரம் கடும்மோதல் ஏற்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயிரிழப்பு ஏற்படும் வகையிலான மோதலாக இது அமைந்தது.
இதில் பிஹார் படைப்பிரிவு கமாண்டர் அதிகாரி கர்னல் பி.சந்தோஷ் பாபு உட்பட 20 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் வீரமரணமடைந்த இருபது பேர்களின் பெயரும் தேசிய போர் நினைவிடத்தில் பொறிக்கப்படும் எனவும்,
சீனாவுடனான மோதலின்போது சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் 5 பேருக்கு பாராட்டு சான்றிதழ் ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவனே வழங்கியுள்ளார்.