பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நயன்தாரா சந்தானம் என பல நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்த படத்தை கே எஸ் சீனிவாசன் என்பவர் தயாரித்திருந்தார்.
முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளனர்.படத்தில் நடிப்பதற்கு ஆர்யா சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் நயன்தாரா மற்றும் சந்தானம் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காரணம் நயன்தாரா அஜித், விஜய், ஷாருக்கான் என பல மொழி படங்கள் பல முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அதே போல் காமெடியனாக இருந்து வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமே நடிக்கிறார். இதனால் இவர்கள் இருவரும் இந்த படத்தில் நடிப்பார்களா அல்லது இவர்கள் பதிலாக நடிக்கப்போவது யார் யார் முதல் பாகத்தைப் போல இந்த பாகம் வெற்றி பெறுமா என பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.