பிகில் மற்றும் கைதி படங்கள் தீபாவளிக்கு ரிலீசாக உள்ள நிலையில் பிரபல தியேட்டரில் எந்தெந்த படத்திற்கு எத்தனை ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படமும் கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள கைதி திரைப்படமும் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதி கொள்ள உள்ளது.
இந்த இரண்டு திரைப்படங்களும் மிக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள திரைப்படங்கள் என்பதால் ரசிகர்கள் இப்படங்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது முதல் நாள் அதாவது அக்டோபர் 25-ம் தேதி சென்னையில் ரோகினி தியேட்டரில் பிகில் திரைப்படத்திற்கு 6 ஸ்க்ரீனும் கைதி திரைப்படத்திற்கு 1 ஸ்க்ரீனும் ஒதுக்கி இருப்பதாக அந்த தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது முதல் நாள் நிலவரம் மட்டும் தான், இரண்டாவது நாளில் இருந்து இந்த ஸ்க்ரீன் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
Screen split for Day1 : #Thalapathy s #Bigil – 5 screens @actorvijay @Karthi_Offl s #Kaithi – 1 screen@RohiniSilverScr
— Rhevanth Charan (@rhevanth95) October 20, 2019