பெருசா யோசிக்காதீங்க ஃப்ரீயா விடுங்க என பிக் பாஸ் குறித்து பதிவு செய்துள்ளார் பிரதீப் அந்தோணி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த வாரம் பிரதீப் ஏற்காடு கொடுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரைப் பேச விடாமல் அவரை வெளியேற்றியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு கமல் கொடுத்த விளக்கம், அவருடைய செயல்பாடுகள் இதற்கு நான் காரணம் இல்லை என அசால்டாக எஸ்கேப் ஆனது போல இருந்ததாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதீப் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பெருசா யோசிக்காதீங்க, ஃப்ரீயா விடுங்க நான் சந்தோஷமா தான் தீபாவளியை கொண்டாடிக்கிட்டு இருக்கேன். பட்டாசு வெடிச்சு சந்தோஷமா இருங்க கறி குழம்பு சாப்பிடுங்க என பதிவு செய்துள்ளார். மேலும் இப்ப கொடுக்கிற இதே ஆதரவை நான் படம் பண்ணும் போதும் கொடுங்கள் என் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதோ அந்த பதிவு