![Madhumitha Bigg Boss Madhumitha Press Meet Video : Shocking Secrets.! | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kamal Haasan](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2019/08/Madhumitha-2-696x418.jpg)
மதுமிதா நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த வீடியோவில் சந்தேகத்தை ஏற்படுத்தும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
Bigg Boss Madhumitha Press Meet : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகிறது.
மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக வெளியேற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து விஜய் டிவி சேனல் அவர் சம்பள பாக்கியை கொடுக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுவதாக மது மீது போலீசில் புகார் அளித்துள்ளது.
இதனையடுத்து மதுமிதா நேற்று பத்திரிகையாளர் சந்தித்து பேசி இருந்தார், இந்த சந்திப்பின் போது மதுமிதா தரப்பில் நடந்த சில சம்பவங்கள் அவர் பொய் சொல்கிறாரா? அல்லது விஜய் டிவி தரப்பு பொய் சொல்கிறதா? என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.
வீட்டுக்கே அடங்காத பொம்பள, இங்கயா அடங்க போகுது? – வனிதாவை விளாசிய விஜய் டிவி பிரபலம்.!
மதுமிதா வாட்ஸப் கால் மூலமாக தற்கொலை செய்து கொள்வேன் என கூறியது உண்மையா என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்புகிறார்.
மதுமிதா பதில் சொல்வதற்கு முன்பாகவே அவரது கணவர் புகாரே பொய்னு சொல்லும் போது இதெல்லாம் பொய் தானே என கூறுகிறார்.
அதன் பின்னர் மது வாட்ஸப்ல பேசி இருக்கோம் ஆனால் அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என கூறுகிறார்.
அதன் பின்னர் மதுமிதா தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் போது மதுமிதாவின் தாயார் மதுவின் காதில் ஏதோ மெல்லிய குரலில் கூறுகிறார், அது என்ன என்பது மற்றவர்களுக்கு தெளிவாக கேட்கவில்லை.
அதுமட்டுமில்லாமல் மதுமிதா பேசி கொண்டிருக்கும் போது மதுமிதாவின் தாயார் பின்புறத்தில் இருந்து அவரின் கையை பிடித்து கொண்டு மதுமிதாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொண்டிருப்பது போல தோன்றுகிறது. மதுமிதா வேறு எதை பற்றியும் பேசி விட கூடாது என்பதற்காக அவரை கட்டுப்படுத்துகிறாரா? என்ற கேள்வி எழுகிறது.
மேலும் மதுமிதா 10 வருடமா நான் சினிமா துறையில் உள்ளேன் இதுவரை நான் யார் மீதும் புகார் கொடுத்ததில்லை. என் மீதும் புகார் கொடுத்ததில்லை என கூறுகிறார்.
ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் பக்கத்துக்கு வீட்டாருடன் சண்டை போட்டு அவரின் கையை பிடித்து கடித்து விட்டதாக மதுமிதாவின் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது, அதற்கு அவரும் பதிலுக்கு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதை மது மறந்து விட்டாரா?
இதெல்லாம் ஒரு புறம் இருக்க மதுமிதா பற்றி பேச்சு வெளியில் பரபரப்பாக சென்று கொண்டிருப்பதால் டிவி சேனல் நிகழ்ச்சியின் ப்ரோமோஷனுக்காக இப்படி செய்கிறது எனவும் தயாரிப்பாளர் ரவீந்திரன் என்பவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
முதல் சீசனில் ஓவியாவின் தற்கொலை முயற்சியை டிவி சேனல் ஒளிபரப்பியது, ஆனால் மதுமிதா வீடியோவை ஒளிபரப்பவில்லை. இதற்கான காரணம் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது மக்களை ஏமாற்றுவது மதுமிதாவா? டிவி சேனலா என்ற சந்தேகம் எழத் தான் செய்கிறது.
Press Meet Video :
கையை அறுத்து கொண்டது ஏன்..? – #மதுமிதா பரபரப்பு பேச்சு..! – https://t.co/oipSLZbjwq#MadhumithaArmy #Madhumitha #BiggBossTamil #BiggBossTamilS3 #Biggboss3tamil #BiggBoss3 #bb3tamil #BiggBossTamilS3 #VijayTelevision #bb3tamil #Sherin #Kavin #Cheran #kamalhassan #caverycalling
— Kalakkal Cinema (@kalakkalcinema) August 22, 2019
மதுமிதாவின் பழைய வீடியோ :
Rewind : விளக்கமளித்த #பிக்பாஸ் மது.. இது பழைய ‘கர்நாடகா’ பிரச்சினை… | #Madhumithahttps://t.co/mx4rrUHbWO#BiggBossTamil #Biggboss3tamil #BiggBoss #BiggBossTamilS3 #Vanitha #kavin #Sherin #madhu #ViralVideo #TrendingVideo
— Kalakkal Cinema (@kalakkalcinema) August 20, 2019