கவின் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக பிக் பாஸிடம் புகார் கூறி கஸ்தூரி கேமராவை உடைத்ததாக தகவல் கசிந்துள்ளது.
Bigg Boss Kasthuri Controversy : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, வனிதாவின் ரி-எண்ட்ரியால் பிக் பாஸ் வீடே ரணகளமாகியுள்ளது.
மதுமிதாவின் தற்கொலை முயற்சி, சேரன் லாஸ்லியாவின் கருத்து வேறுபாடு என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அடுத்த சர்ச்சையாக தகவல் ஒன்று படு வைரலாக பரவி வருகிறது. அதாவது கஸ்தூரி கவின் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பிக் பாஸிடம் முறையிட்டதாகவும் தன்னை உடனே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுமாறு கேட்டதாகவும் கூறப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேறுவாரா? மாட்டாரா? – வெளியான ஷாக்கிங் அப்டேட்
இந்த கோபத்தில் கஸ்தூரி பிக் பாஸ் வீட்டில் இருந்த ஒரு கேமராவை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது, ஆனால் இதுவரை இதன் உண்மை தன்மை வெளியாகவில்லை.
இந்த பிரச்சனையால் சில மணி நேரம் பிக் பாஸ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் ப்ரோமோக்களும் சுவாரஷ்யமாக இல்லை என கூறுகின்றனர்.
இது உண்மை தானா? அல்லது யாரோ கிளப்பி விட்ட வதந்தியா என்பதெல்லாம் இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்து விடும்.