பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Bigg Boss 2nd Eviction Update : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் வார இறுதியில் நடிகை ரேகா வெளியேற்ற நிலையில் இரண்டாவது வார வெளியேற்றப்படலத்திற்காக ஆரி, அனிதா, ஆஜித், பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் பாலா மற்றும் ஆஜித் ஆகியோர் காப்பாற்றப்பட்டு விட்டனர். எஞ்சியுள்ள அனிதா, ஆரி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என தெரிய வந்துள்ளது. சுரேஷ் சக்ரவர்த்தி தான் பிக் பாஸ் சீசன் 4 ஹீரோவாக வலம் வருகிறார். அவரால் மட்டும்தான் டிஆர்பி எகிறுகிறது.
அனிதா சம்பத் ஓரளவிற்கு கண்டெண்ட் கொடுக்கிறார் என்பதால் அவரையும் வெளியேற்ற வாய்ப்பில்லை. நடிகர் ஆரிக்கு மக்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இந்த வாரம் நோ எவிக்சன் என்ற யுக்தியை பிக்பாஸ் கையில் எடுத்துள்ளார்.