பாரதியை தேடிச்சென்ற வெண்பாவுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
Bharathi Kannamma Episode Update 31.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஜெயிலில் இருந்து வெளியே வந்த வெண்பா சாந்தியிடம் நான் உள்ளே இருந்த நேரத்தில் என்னவெல்லாம் நடந்தது என கேட்கிறார். பாரதி ஏன் இன்னும் என்னை பாக்க வரல என கேட்கிறார். சாந்தி உண்மையை மறைக்க மாயாண்டி அவர் வர மாட்டான் அவனுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது என கூறி அதிர்ச்சி கொடுக்கிறார்.
பிறகு சாந்தி பாரதி சென்று சந்தித்து என்பவரை வெளியே எடுக்க முயற்சி செய்யும் அது கேட்ட போது அவர் பேசியதை கூறுகிறார். அதன்பிறகு வெண்பா நேராக மருத்துவமனைக்குச் சென்று பாரதியை சந்திக்கிறார். ஆனால் பாரதி இங்கே எதுக்கு வந்த, அஞ்சலிக்கு நீ செய்தது எவ்வளவு பெரிய துரோகம். என்கூட நல்லவ மாதிரி சுத்திக்கிட்டு எவ்வளவு பெரிய கேவலமான வேலையை பார்த்து இருக்க. என் முகத்திலேயே முழிக்காதே வெளியே போ என கூறுகிறார். வெண்பா கண்ணம்மா கூட ஜாலியா சேர்ந்து வாழறியாமே என கேட்க நான் யார் கூட இருந்தா உனக்கு என்ன போடி வெளியே என கூறி வெளியே அனுப்புகிறார்.
இந்தப் பக்கம் சௌந்தர்யா ஹேமாவையும் லட்சுமியையும் வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது பாரதியின் கார் கண்ணம்மா வீட்டுப் பக்கம் சென்றதை ஹேமா பார்த்துவிட டாடியின் கார் எதுக்கு இந்த பக்கம் போவது என கேட்கிறார். கேம்ப்ள சாப்பாடு சரி இல்லன்னு சமையல் அம்மா கிட்ட தான் சாப்பாடு வாங்கி சாப்பிடுகிறேன் என்று சொல்லி சமாளித்திருக்கிறார்.
அதன் பிறகு வீட்டுக்கு போன பாரதி கண்ணம்மா மீது எறிந்து விழ எதுக்கு இப்படி தேவை இல்லாம என் மேல கோபத்தை காட்டுறாரு என யோசித்துக் கொண்டு ரோட்டில் நடந்து செல்ல அப்போது எதிரில் வெண்பா காரில் வந்து இறங்குகிறார். என்ன கண்ணம்மா என்னை ஜெயில் அனுப்பிட்டு சந்தோஷமா இருக்கியா? எப்படி இவர் வெளியே வந்தானு யோசிக்கிறியா? எங்க தட்டுனா எப்படி திறக்கும்னு எனக்குத் தெரியும். இனிமே நீ எப்படி சந்தோஷமா இருக்கணும் பார்க்கிறேன். சரி டெய்லி வா இந்த பக்கம் தான் காய்கறி வாங்கப் போவேன் அது என்னைப் பார்த்துட்டு வயிறு எரிந்து சாவு. வேணும்னா நாளிலிருந்து அவரையும் கூட்டிகிட்டு ஜாலியா வரேன் என கூறுகிறார்.
பாரதி நான் வளக்குற நாய்க்குட்டி. இன்னைக்கு ஏதோ என் மேல இருக்க கோவத்துல உன்கூட இருக்கான். அவனை எப்படி என் பக்கம் கொண்டு வரணும்னு எனக்கு தெரியும் என வெண்பா சொல்ல முடிஞ்சா பண்ணிக்கோ என கண்ணம்மா சவால் விடுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.