ஜாமீனில் வெளியே வந்துள்ளார் வெண்பா. லட்சுமி வீட்டுக்கு வந்ததால் கடும் அதிர்ச்சியில் உள்ளார் கண்ணம்மா.

Bharathi Kannamma Episode Update 30.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவால் கருக்கலைப்பு பிரச்சினையில் ஜெயிலுக்குப் போன பின்பு ஒரு மாதத்திற்குப் பின்னர் இன்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனால் சாந்தி மற்றும் மாயாண்டி ஆகியோர் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இந்தப் பக்கம் கண்ணம்மா லட்சுமியை எப்படி திரும்பவும் சௌந்தர்யா வீட்டிற்கு அனுப்பி வைப்பது. பாரதி மட்டும் இவரை பார்த்து விடக்கூடாது எனவே நினைத்துக்கொண்டிருக்க சௌந்தர்யா ஹேமாவை கூட்டிக்கொண்டு காரில் வருகிறார். சமையல் அம்மா வீட்டை பார்த்ததில் லட்சுமி இங்கயா இருக்கா என கேட்க போய் பார்க்கலாம் என சொல்ல மேலே சென்ற அம்மா லட்சுமி இந்திய இருப்பதை பார்த்து பாட்டியிடம் கூறுகிறார். பிறகு லட்சுமி உன்ன எங்கெல்லாம் தேடுறது பயந்து போய் விட்டோம் என கூறுகிறார். சாரி அம்மா எனக்கு அம்மா ஞாபகம் ஆயிடுச்சு அதனால தான் வந்து விட்டேன் என கூறுகிறார்.

பிறகு நான் திரும்பவும் பாட்டியோட போகல இங்கேயே இருந்துடுறேன் என லஷ்மி சொல்ல ஹேமா நான் இங்கேயே இருக்கிறேன் என கூறுகிறார். என்ன செய்வது என யோசித்த சௌந்தர்யா கொரானாவால் மூடியிருந்த ஜூவை திரும்பவும் திறந்துட்டாங்க. நீ தான் போயிட்டு வரேன் என்று சொன்னாலே போலாமா என சௌந்தர்யா ஹேமாவிடம் கேட்கிறார். போகலாம் பாட்டு என அவரும் சொல்ல உன் பிரண்டு யாரும் வரலையா என கேட்கிறார்.

உடனே அம்மா லட்சுமியிடம் நீயும் வா என கூப்பிடுகிறார். அங்க ஒட்டகச்சிவிங்கி எல்லாம் இருக்கும் உனக்குத்தான் ஒட்டகச்சிவிங்கினா ரொம்ப பிடிக்கும் என சொல்கிறார். நானும் வரேன் என லட்சுமி சொல்ல சரி சாப்பிடுங்க கிளம்பலாம் என சௌந்தர்யா கூறுகிறார். உடனே லட்சுமி தன் அம்மாவை விட்டு செல்ல யோசிக்கிறார். பிறகு ஒருவழியாக அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு கூட்டிச் செல்கின்றனர்.

இந்தப் பக்கம் வீட்டுக்கு வந்த வெண்பாவிற்கு ஆர்த்தி எடுத்து வரவேற்கிறார் சாந்தி. பாரதிக்கு நான் வெளியே வந்த விஷயம் தெரியுமா தெரியாதா என கேட்கிறார். ஏன் வரல என கேட்க சாந்தி உண்மையை சொல்லாமல் மறைத்து விடுகிறார். பிறகு இனி நா டாக்டர் வேலையை பார்க்க முடியாது என மிகுந்த கோபப்படுகிறார் வெண்பா. என்னை ஜெயிலுக்கு அனுப்பினர் கண்ணம்மாவை நான் சும்மா விடமாட்டேன். இனி அவளை நிமிஷத்துக்கு நிமிஷம் பழிவாங்குவேன் என சபதம் எடுக்கிறார்.

நான் உள்ள போனதுக்கு அப்புறம் இங்க என்னவெல்லாம் நடந்துச்சு என கேட்க சாந்தி திருதிருவென முழிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.