வீட்டுக்கு வந்த லட்சுமியால் கையும் களவுமாக சிக்கியுள்ளார் கண்ணம்மா.
Bharathi Kannamma Episode Update 29.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. சௌந்தர்யா வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கிளம்பிய லட்சுமி ரோட்டில் நடந்து வருவதைப் பார்த்த ஆட்டோ டிரைவர் அண்ணா லட்சுமியிடம் என்னமா தனியா நடந்துட்டு வர என கேட்கிறார். அம்மாவை பார்க்க வீட்டுக்கு போறேன் என சொல்ல பிறகு இது அம்மாவுக்கு தெரியுமா எனக் கேட்க, தெரியாது எனக் கூறுகிறார். அதன்பிறகு லட்சுமியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்.
வீட்டுக்கு வந்த லட்சுமி வெளியில் காத்துக் கொண்டிருக்க இந்த பக்கம் லட்சுமியை தேடி வீட்டில் உள்ள அனைவரும் அலைகின்றனர். ஹேமா லட்சுமி யாரோ கடத்திட்டாங்க என அழைக்கிறார். பதட்டத்தில் அகிலன் அன்னைக்கு போன் பண்ணி கேட்கலாம் என வாய் விட்டு விட அண்ணியா என ஹேமா அதைப் பிடித்துக் கொள்கிறார்.
அண்ணினா அண்ணா வைஃப் அப்போ டாடியோட வைஃப் சமையல் அம்மாவா என கேட்கிறார். வயசுல பெரியவங்களா ஏதாவது மரியாதையா சொல்லித்தானே கூப்பிடுவோம் அப்படித்தான் சொன்னேன் என அகிலன் சமாளித்து விடுகிறார். இந்த பக்கம் லட்சுமி வீட்டின் வெளியே இருப்பதை பார்த்த கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். பிறகு சொல்லாம எதற்கு வந்த என கேட்கிறார். உன்ன பாக்கணும் போல இருந்துச்சு அதுதான் வந்துட்டேன் கதவை திற ரொம்ப பசிக்குது என்ன சொல்கிறார்.
சரி என கண்ணம்மா கதவை திறக்க மேஜையின் மீது பாரதியின் துணிகள் இருப்பதை பார்த்து என்ன செய்வது என அதிர்ச்சி அடைகிறார். கையில் இருந்த காய்கறி பையை கீழே போட்டு அதனை லட்சுமி எடுக்கச் சொல்லிவிட்டு அந்தத் துணிகளை எடுத்து மறைத்து வைக்கிறார். பிறகு தண்ணியையும் பிஸ்கட்டையும் கொடுத்து சாப்பிட சொல்கிறார். அதன்பிறகு சுவற்றில் சாப்பாட்டு விவரங்களை பாரதி எழுதி வைத்திருப்பதை பார்த்து லட்சுமி இது என்ன என கேட்கிறார். நீ இல்லாமல் நான் மட்டும் சாப்பிடும் கணக்கை எழுதி வைத்திருக்கிறேன் என கூறி சமாளிக்கிறார். அதன்பிறகு லட்சுமி உட்கார்ந்து சாப்பிட சொல்லிவிட்டு சௌந்தர்யாவுக்கு போன் செய்து லட்சுமி இங்கே வந்து இருப்பதை சொல்கிறார். பாரதி இந்த நேரத்தில் வந்து விட்டால் லட்சுமி கேள்வி மேல கேள்வி கேப்பா என்னால சமாளிக்க முடியாது என சொல்கிறார்.
பிறகு நான் பார்க்கிறேன் என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன் என சொல்லி போனை வைக்கிறார் சௌந்தர்யா. இந்த பக்கம் வீட்டுக்கு வந்த சௌந்தர்யா அழுது கொண்டிருக்கும் அம்மாவை சமாதானம் செய்து போய் முகத்தை கழுவிட்டு வா நாம ரெண்டு பேரும் போயிடலாம் என சொல்லி அனுப்பி வைக்கிறார். அதன் பிறகு என் கிட்ட ஒரு வார்த்தை சொல்ல மாட்டீங்களா என வீட்டில் உள்ளவர்களிடம் கேட்கிறார். அவ அவங்க அம்மாவை தேடி வீட்டுக்கு போய்ட்டா என கூறுகிறார். நல்ல வேலை இப்போ பாரதி இல்ல. பாரதியின் கண்ணம்மா அதையும் சேர்த்து வைத்துப் பார்த்தால் கேள்வி மேல கேள்வி கேட்பா. ஏற்கனவே குழந்தைகளுக்கு ஒரு சின்ன சந்தேகம் இருக்கு என சௌந்தர்யா கூறுகிறார்.
பிறகு ஹேமாவை அழைத்துக்கொண்டு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.