வேணு சத்தியம் செய்து கொடுக்குமாறு கேட்க பாரதியும் கண்ணம்மாவும் என்ன செய்தனர் என்பது குறித்து பார்க்கலாம்
Bharathi Kannamma Episode Update 29.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. மாமனாருக்கு நெஞ்சுவலி என்ற செய்தியைக் கேட்ட கண்ணம்மா மருத்துவமனைக்கு ஓடிச் சென்றார். நெஞ்சு வலியால் அவதி படுவது போல நடித்துக் கொண்டிருக்கும் வேணு இதுவரையும் சேர்ந்து நீக்குமாறும் உங்களை சரியாக பார்க்க ஆசைப்படுகிறேன் என அளந்து விட சௌந்தர்யா இருவரையும் ஒன்றாக நிற்க வைத்தார்.
பின்னர் இன்னொரு டாக்டர் வந்து வேணுவை செக்கப் செய்து அவரும் ஒன்றும் இல்லை என கூறி விட்டு சென்றார். பின்னர் ஏனோ கண்ணமாவை வீடு வரைக்குமாவது வந்து விட்டுச் செல்லுமாறு கூப்பிடுகிறார். பின்னர் ஒருவழியாக சம்மதம் தெரிவித்த கண்ணம்மா வீட்டிற்கு செல்கிறார்.
ஐபிஎல் தர்பார் : 8 அணிகளின் புள்ளிப்பட்டியல் முழுவிவரம்..
இன்னொரு பக்கம் லட்சுமி ஆட்டோ டிரைவர் போனில் இருந்து ஹேமாவுக்கு போன் செய்து பேசுகிறார். உங்க வீட்டில இருக்காங்க எல்லாரும் இதுக்கு மேலயும் எங்க அம்மா மேலயும் இவ்வளவு பாசமா இருக்காங்க என்ன லட்சுமி கேட்க பதிலுக்கு சமையல் அம்மா எதுக்கு என் மேல இவ்வளவு பாசமா இருக்காங்க என ஹேமா கேட்கிறார். நம்ப ரெண்டு பேரும் ஒரே வீட்டில் பிறந்து இருந்தா ஜாலியா இருக்கும் என லட்சுமி கூற எனக்கும் இந்த மாதிரி நிறைய முறை யோசனை வந்து இருக்கு என ஹேமா கூறுகிறார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் வாக்குவாதம் – Blue Shirt Maaran Speech
ஆனால் வீடு வாசல் வரைக்கும் சென்ற அவர் வீட்டிற்குள் செல்ல மறுக்கிறார். எந்த உரிமையில் வீட்டிற்கு வருவது என கேட்கிறார். அப்போ இந்த வீட்டுக்குள்ள வந்து வாழவே மாட்டியா என்ன சௌந்தர்யா கேட்க அது என் கையில இல்ல உங்க பையன் கையில தான் இருக்கு. அவர் நான் செய்தது தப்பு என மன்னிப்பு கேட்டால் நான் யோசிக்கிறேன் என கூறுகிறார். அதன் பின்னர் கண்ணம்மா வீட்டுக்கு கிளம்புகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.