பாரதியிடம் உதவி கேட்டுள்ளார் கண்ணம்மா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இரவில் குழந்தைகள் எல்லோரும் தூங்கிய பிறகு பாரதி தங்களது காதல் பாட்டை பாட அதை கேட்ட தாமரை என்ன இது பாட்டு சத்தம் கேக்குது இந்த பாட்டை எந்த படத்திலயும் கேட்டது இல்லையே என கேட்க கண்ணம்மா அந்த பாட்டு உருவான விதம் பற்றி கூறுகிறார்.

அதன் பிறகு மறுநாள் காலையில் கண்ணம்மா வாசல் பெருக்கி கோலம் போட பாரதி உன் பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா என பாட்டு பாடி கண்ணம்மாவிடம் பேச ஒரு கட்டத்தில் கண்ணம்மா கோபப்பட்டு பாரதியை திட்ட அப்போது பாரதி இரண்டு நாளாக சாப்பிடாத காரணத்தினால் மயங்கி விழுகிறார்.

ஆனால் கண்ணம்மா அதை நடிப்பு என நினைத்து நீங்க என்ன நடித்தாலும் என் மனசு மாறப்போறது கிடையாது உங்க மேல இரக்கம் காட்ட மாட்டேன் என திட்டி விட்டு சென்று விடுகிறார். அதன் பிறகு பூஜா படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளவே இல்லை, மூச்சுப் பேச்சு இல்லாமல் கிடைக்க தாமரை பதறிப்பை சத்தம் போட கண்ணம்மா ஓடிச் சென்று பார்க்க பிறகு வேறு வழி இல்லாமல் பாரதியிடம் உதவி கேட்க பாரதி ஓடிவந்து சிகிச்சை கொடுக்க முயற்சி செய்கிறார்.

பிறகு ஆம்புலன்ஸை வர வைத்து பூஜாவுக்கு சிகிச்சை அளித்து கண் விழிக்க வைக்க போராடுகிறார். அதற்குள் ஊர் பெரியவர்கள் யாராக இருந்தாலும் ஊர் கட்டுப்பாடு மீறக் கூடாது. கண்ணம்மா எப்படி டாக்டர் பாரதியிடம் பேசலாம் என வந்து சத்தம் போட்டுக் கொண்டிருக்க கண்ணம்மா குழந்தைக்காக தான் பேசியதாக கூறுகிறார்.

பிறகு பாரதி சிகிச்சை முடித்து பூஜாவை கண் விழிக்க செய்து பிறகு வெளியே வந்து சொல்ல தாமரை சந்தோஷப்பட்டு நன்றி கூறுகிறார். ஊர் பெரியவர்கள் பாரதியிடம் ஏதோ எங்க ஊர் குழந்தையோட உயிரை காப்பாற்றியதால் இந்த முறை சும்மா விட்ரோம். அடுத்து என்ன செய்யணும்னு நாங்க கூடி பேசிட்டு வரோம் என சொல்லிவிட்டு செல்கின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.