பூஜை முடிந்ததும் பாரதி கொடுத்த ஷாக்கால் குடும்பத்தார் அனைவரும் மிரண்டு போயுள்ளனர்.
Bharathi Kannamma Episode Update 20.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக வீட்டிற்குப் போன நிலையில் அவர்களுக்கு மாற்றி எடுத்து உள்ளே வரவேற்றார் சௌந்தர்யா. பிறகு உள்ளே போன இவர்கள் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக பேசிக்கொண்டனர்.
இந்தப் பக்கம் வெண்பா பாரதியுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஃபீல் செய்துகொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மாயாண்டி பாரதியும் கண்ணம்மாவும் கோவிலில் ஒன்றாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை காட்ட அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். என் வாழ்க்கையை மொத்தமாக போச்சு நான் தோத்துட்டேன் அந்த கண்ணம்மா ஜெயிச்சுட்டா என கண் கலங்குகிறார்.
இந்த பக்கம் குழந்தைக்கு என்ன பெயர் தேர்ந்தெடுத்து இருக்கீங்க என பாரதி கேட்க அது சஸ்பென்ஸ் என அஞ்சலியும் அகிலனும் கூறினர். அதன் பிறகு அஞ்சலி ஒரு நிமிடம் என சொல்லி விட்டு உள்ளே சென்று வந்து கிப்ட் ஒன்றை கொடுத்தார். இதை எப்போடா வாங்குன என சௌந்தர்யா கேட்க இதுவும் சர்ப்ரைஸ் தான் என கூறினார்.
அதன்பிறகு பூஜையில் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக அமர்ந்து ஒருவழியாக சிறப்பாக பூஜையை முடித்து விட்டனர். பூஜை நடக்கும்போது கண்ணம்மா இதெல்லாம் கனவா நிஜமா என தெரியவில்லை என கண்ணமா கேட்க நீ சந்தோஷமா இருக்க தானே என பாரதி கேட்கிறார். ரொம்ப சந்தோஷமா இருக்கு என கண்ணம்மா சொல்ல இதெல்லாம் தல சுத்தி மேல கைய வெச்சிகிட்டு யாராச்சும் சொல்லுவாங்களா என கேட்கிறார். இனிமே எப்பவும் சந்தோஷமா இருப்பேன் நான் இருக்கேன் என பாரதி கூறுகிறார்.
அதன் பிறகு குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா நடக்கிறது. ஆதவன் என பெயர் வைக்கின்றனர். பிறகு குருக்கள் கண்ணம்மாவை பாரதியின் காலை தொட்டு வணங்கிக் கொள்ள கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளச் சொல்கிறார்.
அனைவரது காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர். பிறகு அகிலன் பாரதி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் எங்க அதுதான் சாமி சொன்னாரே என கூறுகிறார். கண்ணம்மாவும் காலில் விழப் போக உடனே அவரை தடுத்து நிறுத்துகிறார் பாரதி. என்னை நீ புருஷனா மதிச்சி என் கால்ல விழணும்னு நினைக்கிறேன் அதை நான் தப்புன்னு சொல்லல. இந்த ஒன்பது வருஷம் பிரிந்து வாழ்ந்த நீயும் சந்தோசமா இல்ல நானும் சந்தோஷமாக இல்லை. லஷ்மியை கூட்டிக்கிட்டு இங்கேயே வந்தது இரண்டு குழந்தைகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்குவோம். அதுக்கு முன்னாடி உன்கிட்ட நான் சில விஷயங்களை பேசணும்.
என் மனசுல இருக்குற எல்லாத்தையும் பேசனும்னு நினைக்கிறேன். இது நான் பொறுமையா நிதானமா யோசிச்சு எடுத்த முடிவு. தயவுசெய்து யாரும் குறுக்கே வந்து பேசி தடுக்காதீங்க. இந்த ஆறு நாள்ல நான் முழுசா மாறிவிட்டேன். நீ என் மேல காட்டுற அன்பு காதல் எல்லாமே நடிப்புன்னு ஒரு ஒரு நொடியும் நான் பரிசோதனை செய்திருக்கேன். ஆனா அது எதுவுமே நடிப்பாக தெரியல உண்மையாகவே நீ அன்பாகத்தான் நடந்துகிட்ட. எனக்கு சில விஷயங்களுக்கு மட்டும் நீ பதில் சொல்லணும் என பாரதி சொல்ல வீட்டிலுள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
கண்ணம்மாவும் அதிர்ச்சியாக பயப்படாதே, நான் சண்டை போடவோ இல்ல பிரச்சனை பண்ணவோ எதுவும் பேச போறது இல்ல என கூறுகிறார். இதனால் கண்ணம்மா ஓரளவிற்கு நிம்மதி அடைந்து சிரிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.