கண்ணம்மாவுடன் ஒரே பெட்டில் படுக்க முடிவு எடுத்துள்ளார் பாரதி.

Bharathi Kannamma Episode Update 17.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. சௌந்தர்யா ஹேமாவுக்கு கணக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் வந்த பாரதி மறைந்திருந்து ஹேமாவை பார்க்கிறார். மகளைப் பிரிந்து இருப்பது கஷ்டமாக இருப்பதாக மனதுக்குள் பேசிக் கொள்கிறார். இந்த நேரத்தில் சௌந்தர்யா தன்னுடைய கணவரை சென்று சாப்பிட சொல்லுமாறு அனுப்புகிறார்.

கீழே செல்ல எழுந்த வேணு பாரதி மறைந்து நின்று ஹேமாவை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறார். பிறகு அதை சௌந்தர்யாவிடம் ரகசியமாக சொல்ல அவர் ஹேமாவை மேலே அனுப்பி வைக்கிறார். பிறகு பாரதியை கூப்பிட்டு அவரிடம் சத்தம் போடுகிறார். நீ கேப்க்கு போய் இருக்கேனு தான் சொல்லி இருக்கேன். நீ இப்படி வந்து ஹேமாவை பார்க்கிறதை அவர் பார்த்துவிட்டால் என்ன பதில் சொல்லுவேன். ஏற்கனவே உங்க ரெண்டு பேரையும் ரெண்டு மூணு இடத்துல ஒன்று பார்த்ததால் இரண்டு குழந்தைகளுக்கும் சந்தேகம் வந்துடுச்சு. இதுவும் பார்த்துவிட்டால் என்ன ஆகும்.

ஹேமா கேள்வி மேல கேள்வி கேட்பது எல்லாத்துக்கும் நம்மகிட்ட பதில் இருக்கா என கேட்கிறார். இரண்டாவது நீ எமோஷனல் லாக்கி இனி இங்க இருந்து போக மாட்ட. அப்புறம் கோர்ட்டுல என்ன பதில் சொல்லுவ. என்னால பொய்யெலாம் சொல்ல முடியாது என பாரதியை திட்டி அனுப்பி வைக்கிறார்.

வீட்டுக்கு வந்த பாரதி வரும்போதே கையில் மாவு இட்லி பொடி என அனைத்தையும் வாங்கி வந்து இனி நானே சமைத்து சாப்பிட்டுப்பேன் என கூறிவிட்டு தோசை ஊற்ற தொடங்குகிறார். முதலில் நெய் தோசை, பிறகு பொடி தோசை ஊற்றுகிறார். வாசனை கம கமன்னு வருது என கண்ணம்மாவை வெறுப்பேற்றிய படி சாப்பிடுகிறார். வேற லெவல்ல இருக்கு என சொல்கிறார்.

அந்த தோசை நல்லா தான் இருக்கும்னு எனக்கு நல்லா தெரியும் என கண்ணம்மா சொல்ல உனக்கு எப்படி சாப்பிடாமலேயே தெரியும் என கேட்கிறார். பிறகு மாவு பாக்கெட்டை எடுத்து இது நான் அரைத்த மாவு. நல்லாத்தான் இருக்கும் என சொல்ல பாரதி பல்பு வாங்குகிறார். எல்லாத்தையும் செய்த நாம மண்ட மேல இருக்க கொண்டைய மறந்து விட்டோமே என்ற கதை போல பாரதி புலம்புகிறார்.

பிறகு கண்ணம்மா பாரதியை தோசை விவகாரத்தில் வெறுப்பேற்றி கொண்டிருக்க அந்த நேரத்தில் வாய்தா வடிவுகரசியான நிஷா மேலே வருகிறார். அவர்களிடம் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் எங்க உறவினர்கள் இங்கே படுத்துக் கொள்ளட்டும் என கேட்கிறார். பாரதி அதெல்லாம் முடியாது என சொல்லு என சைகை காட்டுகிறார். ஆனால் கண்ணம்மா எங்களுக்கு இடம் பத்தாது என சொல்ல உங்களுக்கு இடம் பத்தாதா என்ன சொல்ற என கேட்கிறார்.

ஆமாம் நான் ஹால்ல படுத்துப்பேன், இவர் ரூம்ல படுத்து பாரு என சொல்ல ஆறு மாதம் சேர்ந்து இருக்கணும்னா ஒரே வீட்டில் ஒன்றாக தூங்கணும் என்றுதான் அர்த்தம். நீங்க கோர்ட்டை ஏமாத்துறாங்களா இருங்க இப்பவே ஜட்ஜ் அம்மாவுக்கு போன் செய்கிறேன் என போனை எடுக்கிறார் வாய்தா வடிவுக்கரசி. உடனே பதறிப்போன பாரதி ஒரு நிமிஷம் இருங்க நாங்க ரூமிலேயே படுத்துக் கொள்வோம் என சொல்கிறார். இன்னைக்கு மட்டும் இல்ல நீங்க ஆறு மாசத்துக்கு ஒரே ரூம்ல தான் தூங்கணும் இல்லன்னா நான் ஜட்ஜ் அம்மா கிட்ட போட்டு கொடுத்து விடுவேன் என மிரட்டுகிறார். இருவரும் சரி என கூறுகின்றனர்.

அதன்பிறகு வாய்தா வடிவுக்கரசி தன்னுடைய உறவினர்கள் எல்லோரையும் வீட்டிற்குள் அழைக்க பிறகு பாரதி ரூமிற்குள் சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.