குடித்துவிட்டு கண்ணம்மா வீட்டிற்கு சென்றுள்ளார் பாரதி.

Bharathi Kannamma Episode Update 11.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பள்ளியில் அம்மாவும் லட்சுமியும் சாப்பாட்டிற்காக காத்துக்கொண்டிருக்க அப்போது ஹேமா கண்ணம்மா வழக்கமாக வரும் ஆட்டோவை பார்க்கிறார். இது சமையல் அம்மா வர வண்டி தானே என கேட்க லஷ்மி ஆமா அம்மா ஏற்கனவே வந்துட்டாங்க போல. உள்ள எல்லாருக்கும் சாப்பாடு கொடுக்க போயிருப்பாங்க என கூறுகிறார்.

இந்த நேரத்தில் சௌந்தர்யாவும் இங்கே வந்து விடுகிறார். அவர் வந்து ஹேமா லட்சுமியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். நீங்க எதுக்கு சாப்பாடு கொண்டு வந்தீங்க சமையல் அம்மா தான் எனக்கும் சேர்த்துக் கொண்டு வருவார்கள் என கூறுகிறார். நானும் இன்னிக்கு ரெண்டு பேருக்கும் தான் சேர்த்து கொண்டு வந்து இருக்கேன் என சௌந்தர்யா சொல்கிறார். இன்னைக்கு யாருடைய சாப்பாடு நல்லா இருக்குன்னு போட்டி வைக்கலாமா என கூறுகிறார்.

லக்ஷ்மி எங்க அம்மா சாப்பாடு தான் எப்படியும் நல்லா இருக்கும் என சொல்ல ஹேமாவும் சமையல் அம்மா சாப்பாடு தான் நல்லா இருக்கும் என கூறுகிறார். அடிப்பாவிங்களா ஒரு பேச்சுக்குக் கூட என்னோட சாப்பாடு நல்லா இருக்கும்னு சொல்லல. ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே மாதிரி பதில் சொல்றீங்க என கூறுகிறார். பிறகு கண்ணம்மாவும் இங்கு வந்து விட பாருங்க சமையல் அம்மா உங்க சாப்பாடு தான் நல்லா இருக்கும்னு ரெண்டு பேரும் சொல்றாங்க என சௌந்தர்யா சொல்ல ஹேமா நீங்கதானே பாட்டி உண்மைய சொல்லணும்னு சொல்லி இருக்கீங்க என கூறுகிறார்.

பிறகு லக்ஷ்மி அம்மா நான் ஒன்னு சொல்லட்டுமா உன் கூடவே வந்து விடவா என கேட்கிறார். எனக்கு ராத்திரி எல்லாம் உன் ஞாபகமாவே இருக்கு உன்னை கட்டி பிடிசிட்டு தூங்க வேணும் போல இருக்கு என சொல்கிறார். அம்மாவும் நானும் வந்துடுறேன் சமையல் அம்மா எங்க டாடி வேற ஊர்ல இருக்கு இல்ல நான் எங்க இருந்தா என்ன என சொல்கிறார். உடனே கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு சவுந்தர்யா என்ன லஷ்மி திடீர்னு வீட்டுக்கு போறேன்னு சொல்ற என கேட்க எனக்கு அம்மா ஞாபகமா இருக்கு என கூறுகிறார். சரி இதையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் என சொல்லிவிட்டு ஹேமாவை கை கழுவ கூட்டிச் செல்கிறார் சௌந்தர்யா.

நீ சமையல் அம்மா வீட்டுக்கு போய்ட்டா அஞ்சலி சித்தியுடன் பாப்பாவ மிஸ் பண்ண மாட்டியா? அவனோட ஜாலியா விளையாடுவ தானா? நீ அங்க போயிட்டா நாங்கலாம் எப்படி உன்ன பாக்காம இருக்கிறது? லஷ்மி போறேன்னு சொல்றாலே என ஹேமா சொல்ல நீ தான் அவளை கன்வின்ஸ் பண்ணி இங்க இருக்க வைக்கணும் என கூறுகிறார்.

சரி பாட்டி என கேட்டுக் கொண்டே அங்கு போனதும் லஷ்மி நாம எங்க வீட்டிலேயே இருக்கலாம் என கூறுகிறார். லஷ்மி ஏன் திடீர்னு இப்படி சொல்ற என கேட்க அம்மா நம்ம வீட்டுக்கு போய்ட்டா அஞ்சலி சித்தி பாப்பாவ ரொம்ப மிஸ் பண்ணுவோம் என கூறுகிறார். உடனே சௌந்தர்யா நீ மிஸ் பண்ண மாட்டியா லஷ்மி என கேட்க நானும் தான் மிஸ் பண்ணுவேன் பாட்டி என சொல்கிறார். நான் தான் தினமும் உன்ன ஸ்கூலுக்கு வந்து பார்க்கிறேன் இல்ல நீ அங்கேயே இரு என கண்ணம்மா செல்கிறார். லட்சுமியும் சரி என ஓகே சொல்கிறார்.

இந்தப் பக்கம் பாரதி ஃபுல்லாக குடித்துவிட்டு உன் பாசத்தை காட்டி என்னை மயக்கி பாக்குறியா என நடுரோட்டில் புலம்பிக் கொண்டிருக்கிறார். எனக்கு நீ வேண்டாம், எவனுக்கோ புள்ள பெத்துட்டு வருவ அதுக்கு நான் அப்பனா இருக்கணுமா? என புலம்புகிறார். பிறகு வீட்டுக்கு போய் வேகமாக கதவை தட்ட கண்ணம்மா கதவை திறக்க பாரதி உள்ளே விழுந்து விடுகிறார். உடனே அவரை தூக்க முயற்சி செய்ய பாரதி don’t டச் என கூறுகிறார். பிறகு சோபாவில் வந்து அமர என்ன குடித்து இருக்கீங்களா என கண்ணம்மா கேட்கிறார்.

ஆமா அதுக்கு என்னடி இப்ப என பாரதி கேட்க உடம்பு என்னத்துக்கு ஆகிறது. உங்க வீட்ல இருக்கன் உங்களுக்கு என்ன பதில் சொல்றது உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கா ஞாபகம் இருக்கா என கேட்கிறார். உன் அட்வைஸ் ஒன்னும் எனக்கு தேவையில்லை என பாரதி சத்தம் போடுகிறார். எங்க அம்மாவை நான் குடிச்சிட்டு வந்தா இதெல்லாம் பேச மாட்டாங்க நீ யாருடி கேள்வி கேட்க என கேட்கிறார். ஓ சமையல் அம்மாவா போய் மாவு ஆட்டுற வேலைய மட்டும் பாரு என கூறுகிறார். ‌ பிறகு சௌந்தர்யாவுக்கு போன் போடுகிறார் பாரதி.

பாரதி பேச ஆரம்பிச்சதும் சௌந்தர்யா குடித்திருக்கியா என கேட்கிறார். அங்கு வரைக்கும் வாசனை வருதா என பாரதி நக்கல் அடிக்கிறார். அம்மா நான் குளிச்சுட்டு வந்தா நீங்களே என்ன கேள்வி கேட்க மாட்டீங்க. ஆனா இத அட்வைசா சொல்லி என்ன கொல்றா. காலையிலிருந்து பக்கம் பக்கமா டயலாக் பேசிட்டு இருக்கா என்னைக் கேள்வி கேட்க இவ யாருமா இவளுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு என கேட்க சவுந்தர்யா அவ உன் பொண்டாட்டி அவ கேள்வி கேட்கலனா தான் தப்பு என கூறுகிறார். ஹலோ நீங்க ரெண்டு பேரும் ஒரே குரூப்ல தெரியாம போன் பண்ணிட்டு நான் வைக்கிறேன் என சொல்ல அந்த நேரத்தில் கண்ணம்மா போனை புடுங்கி பேசுகிறார்.

அப்போது பாரதி வாந்தி எடுக்க போனை வைத்துவிட்டு அவர் தலையைப்பிடித்து உதவி செய்கிறார் கண்ணம்மா. பிறகு அவரை பாத்ரூமுக்கு கூட்டிச் சென்று முகத்தை அலம்பி விட்டு பெட்ரூமில் படுக்க வைத்து உடை மாற்றி விடுகிறார். போதையில் பாரதி எல்லாத்துக்கும் நீதான் டி காரணம் என சொல்ல கண்ணம்மா வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.