பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார் வெண்பா.

Bharathi Kannamma Episode Update 10.02.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. காலையில் வாரத்திற்கு முன்பாகவே எழுந்து அவருக்கு காபி கொண்டுபோய் கொடுக்கிறார் ஹேமா. நீ எதுக்கு இவ்வளவு சீக்கிரமே எழுந்து விட்டேன் என கேட்க நைட் உங்களுக்கு காபி கொடுக்கணும்னு நெனச்சுக்கிட்டேன் படுத்தேன் அதனால எழுந்திட்டேன் எனக் கூறுகிறார். ஆனா நீ இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ணக்கூடாது இதையெல்லாம் பண்றதுக்கு வீட்ல நிறைய பேர் இருக்காங்க என பாரதி சொல்கிறார். எனக்கு வாத்தியாரு என்று கேட்க அம்மா என ஹேமா சொல்ல பெரிய உங்களுக்குள்ள சண்டை சச்சரவு வாக்குவாதம் வருவது சாதாரண விஷயம், அதையெல்லாம் நீ தலையில் ஏற்றிக் கொள்ளக்கூடாது என்று கூறுகிறார். அவங்ககிட்ட போய் கோபமாகப் பேசக்கூடாது என பாரதி சொல்லித் தருகிறார். ஹேமாவும் பாரதி சொல்வதை ஏற்றுக் கொண்டு சரி எனச் சொல்கிறார்.

பிறகு சௌந்தர்யா தன்னுடைய கணவரிடம் ஹேமா பேசியதைப் பற்றி பேசி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். நான் என் பையனை விட்டு ரொம்ப விலகி வந்துவிட்டேன் என வருத்தப்படுகிறார். நீ சரியான பாதையில் தான் போயிட்டு இருக்கேன் நீ இப்படி எல்லாம் பண்ணலன்னா கண்ணம்மாவும் லட்சுமியும் என்ற ஒரு கிராமத்துல வாழ்ந்துட்டு இருப்பாங்க என கூறுகிறார்.

இந்தப் பக்கம் வெண்பா மாயாண்டி சொன்னதை பற்றி யோசித்துக் கொண்டிருக்க சாந்தி ஒரு ஐடியா கொடுக்கிறார். அகில மேடம் அஞ்சலியை கடத்தியது மாயாண்டி தான் என போட்டுக் கொடுத்து விடலாம். மீதியை அவன் பார்த்து பலன் சொல்ல வேண்டும் இது சூப்பர் ஐடியா என முடிவு செய்கிறார். மேலும் வெண்பா வேறொரு சிம் கார்டில் இருந்து அகிலனுக்கு போன் செய்ய முயற்சி செய்கிறார். இந்த நேரத்தில் சரியாக மாயாண்டி போன் செய்து அவசரத்தில் ஏதோ பேசி விட்டேன்.

என்ன பத்தி உங்களுக்கு தெரிந்த சில விஷயம் இருக்கு. அஞ்சலியே கடத்தி கொலை பண்ண திட்டமிட்டது நான்தானே அகிலனுக்கு நீங்க சொல்லலாம். அப்படியொரு சாதனையைப் உங்களுக்கு வர வாய்ப்பு இருக்கு ஆனா அந்த முடிவை அப்படியே கைவிட்டு விடுங்கள். நீங்க ஒருவேளை அகிலன் இடம் உண்மை சொன்னால் அடுத்த சொன்னது யாரு? என்ற உண்மை எல்லாம் நான் சொல்லி விடுவேன். இந்த நீங்க நம்ப மாட்டீங்க நீங்க என்கிட்ட பேசின ஆடியோ ஆதாரம் எல்லாம் இருக்கு. சாம்பிளுக்கு ஒன்று அனுப்புறேன் கேட்டுட்டு முடிவு பண்ணுங்க என கூறுகிறார்.

அதன்பிறகு ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்ப அதைக்கேட்டு வெண்பா அதிர்ச்சி அடைகிறார். வசமா சிக்கிட்டோம் என புலம்புகிறார். அப்படியே இந்தப் பக்கம் கண்ணம்மா ஏதோ ஒரு யோசனையில் இருக்க அப்போது லட்சுமி தெருவுல இருக்க என் பிரண்ட்ஸ் எல்லார்கிட்டயும் உன்னோட பிறந்தநாளுக்கு கூப்பிட போறேன். எங்க அப்பா வர போறாங்க தெரியுமா சொல்ல போறேன் என்று சொல்லிவிட்டு போடுகிறார். தலை முதல் கால் வரை முழுக்க முழுக்க அப்பா நினைப்பாவே இருக்கா. பாரதியே எப்படியாவது இந்த பங்ஷனுக்கு வர வைக்கணும் என யோசிக்கிறார் கண்ணம்மா. பாரதிக்கு போன் போட்டு நாமே கூப்பிடலாம் என்று முடிவு செய்து அவருக்கு போன் சொல்கிறார். நீங்க என்னுடைய பிறந்தநாளுக்கு வரணும்னு லட்சுமி ரொம்ப ஆசைப் படுறா அதனால கண்டிப்பா வாங்க கண்ணம்மா அழைக்கிறார். நான் உன்னை அசிங்க படுத்தின மாதிரி நீ என்னை அசிங்கப் படுத்த திட்டம் போட்டு இருக்கியா? பாரதி கேட்க நிச்சயமா அப்படி எதுவும் இல்லை என கண்ணம்மா சொல்கிறார். நீ என்னதான் சொன்னாலும் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு பாரதி போனை கட் செய்து விடுகிறார்.

அதன்பிறகு ஹாஸ்பிடலுக்கு கிளம்பிச் செல்லும்போது சௌந்தர்யாவிடம் உங்க மருமகள் போன் பண்ணி பர்த்டே ஃபங்ஷனுக்கு வர சொல்லி கூப்பிட்டா.. நான் எதுக்கு அங்கே வரணும். தயவு செய்து இனிமேல் எனக்கு போன் பண்ண வேணாம்னு சொல்லுங்க. யாரு என்ன சொன்னாலும் என்னால அந்த பங்ஷனுக்கு வர முடியாது என சொல்லிவிட்டு பாரதி கிளம்புகிறார். இவன் இப்படி சொல்ற என்ன பண்றது. அங்கே கண்ணம்மா பங்ஷனுக்கு ரெடி பண்ணிட்டு இருக்கா. கடவுளே என்னதான் நடக்கப் போகுதுன்னு தெரியல சௌந்தர்யா குழம்புகிறாள். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.