கண்ணம்மாவுடன் மீண்டும் சண்டை உள்ளார் பாரதி.

Bharathi Kannamma Episode Update 09.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி கண்ணம்மா வீட்டில் அமர்ந்து லேப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் வந்த கண்ணம்மா பசிக்கலையா சாப்பிடுறீங்களா என கேட்கிறார். எனக்கு இப்போ வேண்டாம் என பாரதி கூறுகிறார். அதன் பிறகு சரி உள்ள இருக்கு பசிச்சா சாப்பிடுங்க நான் குளிக்கப் போகிறேன் என கூறுகிறார் கண்ணம்மா. பிறகு பாரதியின் போனை மாற்றி எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்று விடுகிறார் கண்ணம்மா.

ஸ்ரீ ரங்கம் சொர்க்க வாசல் திறப்பு : பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இந்த பக்கம் பாரதி அவருடைய போனை தேடுகிறார். போன் எங்கேயும் கிடைக்காததால் கண்ணம்மாவின் போனில் இருந்து அந்த போனுக்கு கால் செய்து பார்க்கலாம் என முடிவெடுக்கிறார். ஆனால் அந்த போனை என்னுடைய கையால் தொடக்கூடாது என நினைத்து ஒரு கர்சிப் வைத்து போனை எடுக்கிறார். தன்னுடைய போனுக்கு போன் செய்து பார்க்கிறார். போன் ரிங் அடிப்பதை கேட்டு அப்படியே கண்ணம்மா குளிக்கும் பாத்ரூம் கதவில் காதை வைத்து கேட்கிறார். அந்த நேரத்தில் கண்ணம்மா கதவைத் திறந்துவிட பாரதி உள்ளே சென்று விழுகிறார். இங்க என்ன பண்றீங்க நான் குளிச்சிட்டு இருப்பதை பாக்கறீங்களா என கண்ணம்மா கேட்கிறார். ச்சீ நான் ஒன்னும் அந்த மாதிரி ஆள் கிடையாது என்ன பத்தி என்ன நெனச்ச என பாரதி கேட்கிறார்.

அதன்பிறகு அப்போ நான் குளிக்கிறத காது வைத்துக் கேட்டுட்டு இருக்கீங்களா என கேட்கிறார். இல்ல போன் ரிங்கடிச்சிருச்சு அது தான் பாத்துட்டு இருந்தேன் என பாரதி சொல்ல நான் எங்க போனை மாத்தி எடுத்துட்டு போயிட்டேனு தான் வேக வேகமா குளிச்சுட்டு வந்தேன் என கண்ணம்மா கூறுகிறார். பிறகு போன பாத்ரூமுக்குள்ள எடுத்துட்டு போறது தப்பு. இதுல என் போன எடுத்துட்டு போயிடு டயலாக் எல்லாம் பேசுற என பாரதி கேட்கிறார். தெரியாமல் எடுத்துட்டு போயிட்டேன் விடுங்க என கண்ணம்மா கூறுகிறார்.

பிறகு திரும்பவும் இந்த போனுக்கு போன் பண்ணுங்க என கூறுகிறார். பாரதி எதற்கு எனகேட்க பண்ணுங்க சொல்றேன் என கூறுகிறார். பாரதி போன் செய்ய அவருடைய போனில் மகா நடிகை என பெயர் வருகிறது. என்ன இது என கண்ணம்மா கேட்க மகா நடிகை சரியாத்தான் சேவ் பண்ணி இருக்கேன் என கூறுகிறார்.

எல்லாரும் வாழ்ந்து இருக்காங்க – Jail Movie Exclusive Celebrity Show | G.V.Prakash, Abarnathy

நீ மட்டும் பாரதி டாக்டர் நீ எதுக்கு என் பேரு சேவ் பண்ணி வச்சிருக்க எனக் கூறுகிறார். என் நம்பரை எதுக்கு நீ வெச்சுட்டு இருக்க என பாரதி கேட்கிறார். இதுக்கு முன்னாடி பாரதி மாமானு சேவ் பண்ணி இருந்தேன் அப்படியே சேவ் பண்ணவா என கண்ணம்மா கேட்க முதல்ல என் போனை கொடு என வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார். எதுக்கு இப்படி சின்னப்பிள்ளை மாதிரி பண்ணிட்டு இருக்கீங்க உங்களுக்கு என்னதான் பிரச்சனை நான் என்ன பண்ணனும் என கண்ணம்மா கேட்கிறார்.

நான் சொல்லுறதை ஒன்னே ஒன்னு செஞ்சா மட்டும் போதும் என பாரதி செல்கிறார். மூணு தலைமுறையும் உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு நான் பணம் தந்து விடுகிறேன். நீ என்னை விட்டு தூரமாக கண்காணாத இடத்துக்குப் போனால் போதும் என பாரதி கூறுகிறார். கடைசி வரை நீங்க என்ன புரிஞ்சிக்கவே மாட்டீங்களா என கண்ணம்மா கேட்கிறார். பணம் தான் வேணும்னு நினைச்சிருந்தா அன்னைக்கே உங்க அம்மா கோடி கோடியாக கொட்டிக் கொடுக்க நினைச்சாங்க வாங்கிட்டு போய் இருப்பேன். என் குழந்தைக்கு அப்பா தான் வேணும் அதுக்கு தான் போராடிட்டு இருக்கேன் எனக் கூறுகிறார்.

அதன் பிறகு இன்னொரு முறை பணத்தை வைத்து என்கிட்ட பேசாதீங்க என் கழுத்துல நீங்கள் கட்டின தாலி இருக்கிற வரைக்கும் அதை நான் செய்ய மாட்டேன் என கூறுகிறார். நல்லா சென்டிமென்ட் டயலாக் பேச கத்துக்கிட்டு இருக்க என பாரதி கூறுகிறார். இன்னும் 6 நாள் தான் இங்கே இருப்பேன் அதுல ரெண்டு நாள் முடிஞ்சு போச்சு என பாரதி சொல்கிறார்.

இந்தப் பக்கம் லட்சுமி எங்க அப்பாவையும் அம்மாவையும் சேர்த்து வைத்து விடு, நாங்கள் ஒன்றாக சந்தோஷமாக இருக்கனும் என சாமியிடம் வேண்டிக் கொண்டதை சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் பார்க்கின்றனர். பிறகு என்ன வேண்டிக்கிட்ட எனக் கேட்க லட்சுமி வேண்டியதை கூறுகிறாள். இதனைக் கேட்டு இருவரும் வருத்தப்படுகின்றனர்.

இந்த பக்கம் அகிலன் காரில் சென்று கொண்டிருக்க திடீரென ஒரு நபர் குறுக்கே வந்து விடுகிறார். உடனே காரில் இருந்து இறங்கி ஓடி வந்து அந்த நபரிடம் சாரி கேட்கிறார் அகிலன். பிறகுதான் அவருக்கு தெரிகிறது அது அஞ்சலியை கடத்திய கும்பலில் இடம்பெற்ற ஒருவன் என. பிறகு அவனைத் துரத்திக் கொண்டு செல்ல அவன் அகிலனை தள்ளி விட்டு தப்பி ஓடி விடுகிறான். சட்டையில் கரையுடன் வீட்டிற்கு வந்த அகிலனை பார்த்து சௌந்தர்யாவும் அஞ்சலியும் பதறிப் போகின்றனர். என்னாச்சு என கேட்க அகிலன் நடந்ததை கூறுகிறான். நீ எதுக்கு தனியா போயிட்டு இப்படி சண்டை போடுற அவன் தனியா இருக்கவே நீ தப்பிச்ச கூட்டமாக இருந்து உன்னை ஏதாச்சு பண்ணி இருந்தாங்கனா என்ன பண்றது என சௌந்தர்யா கூறுகிறார்.

பிறகு ரூமுக்குள் அஞ்சலி ஏன் இப்படி பண்ற அவங்கள போலீஸ் பார்த்துப்பாங்க. நீ குழந்தையுடன் நேரத்தை செலவிடு என அஞ்சலி கூறுகிறார். அப்படியெல்லாம் விட முடியாது. உன்ன கடத்தியது யார் என்று தெரிஞ்சுக்கணும். உஷாரா இருக்க முடியும். இல்லன்னா இன்னொரு ஆபத்துக்கு நாமலே கதவைத் திறந்து வைக்கிற மாதிரி இருக்கும் என அகிலன் கூறுகிறார். பிறகு அஞ்சலியை கட்டியணைத்து அன்பை பரிமாற இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.