பாரதி கொடுத்த அதிர்ச்சியால் கண்ணம்மா அதிர்ந்து போக விஷயம் கேட்டு ஜெயிலில் துள்ளி குதித்து உள்ளார் வெண்பா.
Bharathi Kannamma Episode Update 09.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா லட்சுமியுடன் பாரதியின் மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கே உள்ளே சென்று பாரதியை பார்த்தபோது உடம்புக்கு என்ன என பாரதி நக்கலாக கேட்டார். உடம்புக்கு எல்லாம் ஒன்னுமில்ல மனசுல தான் யாரோ குத்தியது போல ரொம்ப நாளா இருக்கு என கூறுகிறார். உடனே பாரதி கண்ணம்மா செக் செய்துவிட்டு உடம்புக்கு ஒன்றுமில்லை உங்கள் இதயம் கல்லு மாதிரி இருக்கே. எங்கேயாவது கீழே விழுந்து இருப்பீங்க என கூறுகிறார். உடனே லட்சுமி அம்மா எங்கேயும் விழல என சொல்ல உனக்கு தெரியாது உங்க அம்மாவுக்கு தெரியும் எனக் கூறுகிறார் பாரதி.
மேலும் பாரதி இன்னைக்கு ரொம்ப நல்ல நாளு கல்யாணம் பண்ண, விவாகரத்து பண்ண என கூறுகிறார். மேலும் அவர் கண்ணம்மாவுக்கு சில மாத்திரைகளை எழுதிக் கொடுக்க உடம்பு நல்லா இருக்கும் போது மாத்திரை எதற்கு என கண்ணம்மா கேட்கிறார். திரும்பவும் விழுந்தாலும் ஒன்றும் ஆகாமல் இருக்க உங்கள் இதயம் பலம் பெற என கூறுகிறார்.
இன்றைய ராசி பலன்.! (9.11.2021 : செவ்வாய்க் கிழமை)
பிறகு வீட்டுக்கு வந்த கண்ணம்மா எதுக்கு அவரு அப்படி சொன்னார் என யோசித்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் அவருக்கு கோர்ட்டில் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வருகிறது. ஜெயிலில் வெண்பா தன்னை சீக்கிரம் ஜாமினில் எடுக்குமாறு வழக்கறிஞரிடம் கூறுகிறார். அதனைத் தொடர்ந்து பாரதி அங்கு வந்து எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு கட்டப் போகிறேன். உன்ன சீண்டிப்பார்த்த கண்ணம்மாவுக்கு ஒரு ஷாக் கொடுத்து இருக்கேன். அதாவது அவளுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கேன் அதை அவளும் வாங்கி விட்டாள், இனி இரண்டு பேரும் கோர்ட்டில் சந்திப்பதுதான் மிச்சம் என சொல்கிறார். விஷயம் கேட்ட வெண்பா மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார். இன்னைக்கு தான் நீ நல்ல முடிவை எடுத்திருக்க உன்னோட முகத்துல தன்னம்பிக்கையும் பிரகாசமும் தெரியுது என கூறுகிறார்.
ஒரே அடிதான் உனக்கு.., Anchor-ஆல் கடுப்பான KPY Dheena..! | Velavan Stores
பிறகு பாரதி நீ வெளியே வருவதற்குள் எங்களுக்கு விவாகரத்து நடந்து முடிந்து இருக்கும் எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். வீட்டில் பாரதி இல்லை என எல்லோரும் பேசிக் கொண்டிருக்க சௌந்தர்யா இப்போ பாரதி கிட்ட கொஞ்சம் மாற்றம் தெரியுது. கண்ணம்மாவுக்கு உன்னை நான் அவன் இப்பவும் பதறுகிறான் என சொல்லிக் கொண்டிருக்க இந்த நேரத்தில் வந்து பாரதி விதவிதமாக டயலாக் பேசி பின்னர் கண்ணம்மாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக கூறுகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இந்தப் பக்கம் கண்ணம்மா எட்டு வருஷமா நான் அனுபவித்த கஷ்டங்கள் போதாதா. கடவுளே என்னை ஏன் நிமிர விடாமல் குத்திட்டே இருக்க. உனக்கு கண்ணில்லையா? இரண்டு குழந்தைகளோடு சேர்ந்து வாழலாம்னு நெனச்சேன் அதுக்கு ஒரு ஐடியா முற்றுப்புள்ளி வைக்க பாக்குறியா என கதறி அழுகிறார். இப்போ நான் என்ன செய்வது என கண் கலங்குகிறார் கண்ணம்மா. இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.