ஹேமா எடுத்த அதிர்ச்சி முடிவால் பாரதி பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி ஹாஸ்பிடல் இருக்க அப்போது கண்ணம்மா உள்ளே வந்து ஹாஸ்பிடல் சார்ந்த விஷயங்களை பேச அது எல்லாம் கேட்டு விட்டு பாரதி ஹேமா அம்மா அப்பா என யாரும் தன்னிடம் பேசுவதில்லை. ஹேமாவுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் அவகிட்ட நீ கொஞ்சம் பேச முடியுமா என கேட்க ஹாஸ்பிடல் சம்பந்தப்பட்ட விஷயத்தை மட்டும் என்னிடம் பேசுங்க. உங்க குடும்ப விஷயத்தில் நான் தலையிட விரும்பவில்லை என சொல்லி வெளியே சென்று விடுகிறார்.
அடுத்து இந்த பக்கம் வீட்டில் ஹேமா கண்கலங்கி அழுது கொண்டு பெட்டியில் தன்னுடைய துணிமணி புத்தகங்களை எடுத்து வைக்கிறாள். பாரதி வந்து ஷோ பாரதி உட்கார யாரும் அவனை கண்டு கொள்ளாமல் அவரவர் வேலையை செய்து கொண்டு இருக்கின்றனர். இந்த நேரத்தில் லட்சுமி கண்ணம்மாவுடன் வீட்டுக்கு வர அவளை எல்லோரும் உள்ளே அழைத்து நலம் விசாரிக்கின்றனர்.
ஹேமா ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு வர சொன்னதாக லட்சுமி சொன்னால் என கண்ணம்மா தொல்லை அப்படி என்ன விஷயம் என எல்லோரும் குழம்புகின்றனர். ஹேமா இங்கே என்ன கேட்க அஞ்சலி என்னிடம் சூட்கேஸ் ஒன்றைக் கேட்டால் அதைக் கொடுத்தேன் அதன் பிறகு உள்ளே போனவள் இன்னும் வரவில்லை என சொல்லிக் கொண்டிருக்க ஹேமா சூட்கேஸை இழுத்துக் கொண்டு கீழே இறங்குகிறார்.
பிறகு என்ன சூட்கேஸ் இது என்ன ஏது என விசாரிக்க ஹேமா நான் அனாதை ஆசிரமத்தில் இருந்தவ தானே, என்ன அங்கேயே கூட்டிட்டு போய் விட்டுடுங்க எனக்கு இங்கே இருக்க கொஞ்சம் கூட பிடிக்கல. நீ என்னோட பொண்ணு இல்ல அவசரமத்தில் இருந்து தூக்கிட்டு வந்தோம் என சொன்னதும் எனக்கு இங்கே இருக்க பிடிக்காம நான் வெளியே கிளம்பினேன். ஆனா அப்போ அவர் என்ன தடுத்து இனிமே உன்கிட்ட பொய் சொல்ல மாட்டேன் உன்ன என் பொண்ணு மாதிரி தான் நினைக்கிறேன் என சொன்னாரு ஆனா ஒரு வாரத்துக்குள்ளையே பொய் சொல்லிட்டு வெண்பா ஆண்ட்டியை கல்யாணம் பண்ணிக்க போயிட்டாரு.
இனிமேல் என்னால இங்க இருக்க முடியாது தயவு செஞ்சு என்னை ஆசிரமத்துல கொண்டு போய் விட்டுடுங்க என கதறி அழுகிறாள். பாரதி என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.