பாரதியுடன் லட்சுமியை எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என முடிவு எடுத்துள்ளார் கண்ணம்மா.
Bharathi Kannamma Episode Update 08.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வீட்டில் உள்ளவர்கள் வெண்பா பற்றி பேசியதை நினைத்து செம கடுப்பாக இருக்கிறார் பாரதி. இந்த கண்ணம்மாவுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என அஞ்சலியின் அம்மாவுக்கு போன் செய்து விவாகரத்து பற்றி பேசியிருந்தேனே என்னாச்சு என கேட்கிறார். இதற்கு அஞ்சலியின் அம்மா இன்னும் கண்ணம்மாவிடம் பேசவில்லை. அதுல ஒரு சிக்கல் இருக்கு. நீங்க கண்ணம்மாவை விவாகரத்து பண்ண போற விஷயம் உங்க அம்மாவுக்கு தெரிஞ்சிடுச்சு. அவங்க என்ன வந்து மிரட்டி கேட்டப்போ நான் உண்மையை சொல்லிட்டேன் என கூறுகிறார். இதனால் கடுப்பான பாரதி போனை கட் செய்து விடுகிறார். இதையெல்லாம் சௌந்தர்யா வெளியே நின்று கொண்டிருக்கிறார்.
வெள்ளி, செவ்வாய் ஜோதி வழிபாடு ஏன்?
இந்தப் பக்கம் கண்ணம்மா லஷ்மிக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருக்கிறார். அப்போது லட்சுமி மறந்துட்டேன் இன்னைக்கு இராத்திரி அப்பாவை பத்தி சொல்றேன்னு சொன்னியே எங்க அம்மா சொல்லுமா என கேட்கிறார். அப்பாவை கூட்டிட்டு வருவேன் இல்லன்னா அப்பா வந்தா என்ன கூட்டிட்டு போவேனு நினைச்சேன் என சொல்கிறார். அப்போது கண்ணம்மா உங்க அப்பா என்னை பிடிக்கலனு சொல்லிட்டு நம்மள விட்டு பிரிஞ்சு போயிட்டாங்க. இனி வருவாரானு தெரியாது என சொல்கிறார்.
லட்சுமி அப்போ அப்பா இனி வர மாட்டாரா? நீ ஏன்மா என்கிட்ட பொய் சொன்ன என அழுகிறார் லட்சுமி. நீ ஏதாவது தப்பு பண்ணிட்டியா? அதுனாலதான் அப்பா உன்னை விட்டுட்டு போய் விட்டாரா என கேட்கிறார். நான் எதுவும் தப்பு பண்ணல. செய்யாத தப்புக்கு உங்கப்பா தண்டனை கொடுத்து விட்டு போயிட்டாரு. என் வயித்துல பொறந்த பாவத்திற்கு நீயும் தண்டனையை அனுபவிக்கிற என கூறுகிறார். லட்சுமி இனி வாழ்க்கையில அப்பாவை பார்க்கவே முடியாதா என கேட்க உன் அப்பாவுடன் சேர்த்து வைக்கிறது என்னுடைய கடமை என்று கூறுகிறார்.
ரெண்டு பேரோட Combo செம – Enemy Day 4 Common Audience Review
இந்த பக்கம் சௌந்தர்யா, அஞ்சலி ஆகியோர் சாமி கும்பிடுகின்றனர். பிறகு ஹேமா அங்கு வர சௌந்தர்யா உங்க அப்பா என்ன பண்றாரு என கேட்கிறார். அவரை காலையிலேயே எழுந்து வெளியே போய் விட்டாரே என ஹேமா கூறுகிறார். விவாகரத்து விஷயமா அவள் வெளியே போய் இருக்கக்கூடாது என கடவுளிடம் வேண்டுகிறார் சௌந்தர்யா.
இந்த பக்கம் லட்சுமி ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டு இருக்க அப்போது அந்த டிரைவர் அண்ணாவிடம் வாயாடி கொண்டிருக்கிறார். இதற்கிடையே இவ்வளவு பேசுராலே பாரதி தான் இவரோட அப்பா என்னெல்லாம் பேசுவா? இவங்க ரெண்டு பேரையும் அடிக்கடி சந்திக்க வைக்கணும் என திட்டம் போடுகிறார் கண்ணம்மா. உடனே தனக்கு இறுமல் இருப்பது போல இறுமுகிறார். உடனே லட்சுமி டாக்டர்கிட்ட போலாமா எனக் கேட்க போலாம்னு கண்ணம்மா கூறுகிறார். பிறகு பாரதி டாக்டர் அங்கிள் கிட்ட போகலாமானு கேட்கிறார் லட்சுமி. கண்ணம்மாவும் சரி என்று சொல்ல மூவரும் ஹாஸ்பிடலுக்கு கிளம்புகின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்.