அஞ்சலியை கடத்தியவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளார் அகிலன்.
Bharathi Kannamma Episode Update 08.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. டாக்டர் தொழிலை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை மீறி வெண்பா மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அவரது மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். வெண்பா எவ்வளவு கெஞ்சியும் அதனை அவர்கள் ஏற்கவில்லை. இந்த பக்கம் பாரதி மருத்துவமனையில் இருக்க அவரது மருத்துமனையில் வேலை பார்க்கும் டாக்டர் ஒருவர் வந்து வெண்பா மருத்துவமனைக்கு சீரழித்து விட்டதாக கூறுகிறார். திருந்தவே மாட்டாய் என பாரதி சொல்லிவிட்டு எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன என கூறுகிறார்.
அதன்பிறகு இந்த பக்கம் கண்ணம்மா அமர்ந்து கொண்டே இருக்க அங்கு வந்த வாய்தா வடிவுக்கரசி புடவையைப் பற்றி கேட்ட இது கல்யாண நாளுக்கு எடுத்துக் கொடுத்த புடவை என கூறுகிறார். நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கும் போது கல்யாண நாளை எப்படி எல்லாம் கொண்டாடுவீர்கள் எங்கெல்லாம் போவீங்க என்னவெல்லாம் செய்தீர்கள் என சொல்லு என்று வாய்தா வடிவுகரசி கேட்கிறார். அதெல்லாம் எதுக்கு கால் என கண்ணம்மா சொல்ல பரவால்ல சொல்லு என கேட்க இவர்கள் கடைசியாக கர்ப்பமாக இருக்கும்போது கல்யாண நாளைக் கொண்டாடிய தருணத்தை கூறுகிறார் கண்ணம்மா. உம்முனா மூஞ்சி பாரதிக்குள்ள இப்படி ஒரு ரொமன்ஸா என கூறுகிறார் வாய்தா வடிவுகரசி.
இந்த பக்கம் அகிலன் காரில் சென்று கொண்டிருக்க அப்போது அவரை அஞ்சலியை கடத்திய கார் கடந்து செல்கிறது. இதனைப் பார்த்த உடன் காரில் வேகமாக சென்று அந்த காரை மறிக்கிறார். பிறகு அந்த காரில் இருப்பவர்களை அடித்து துவம்சம் செய்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கிறார். எதுக்காக அஞ்சலியை கடத்தினீங்க என கேட்க பணத்துக்காகத்தான் கடைசியும் என ஒருவன் கூறுகிறான். பணக்கார வீட்டு பெண்ணா இருக்குனு மிரட்டி பணம் பறிக்கலாம் என நினைத்தோம் அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க. உங்களுக்கு தலைமை யாருடா என கேட்க மாயாண்டி போட்டு கொடுக்காமல் மறைத்து விடுகிறான். போலீஸும் அங்கு வந்து அந்த நான்கு பேரை கைது செய்து விட மாயாண்டி அங்கிருந்து எஸ் ஆகி விடுகிறார். அகிலனை சும்மா நினைக்கக்கூடாது அவனை மொத்தமாக முடித்து விடனும் என முடிவு செய்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.