கண்ணம்மாவால் கோமாளியாக மாறியுள்ளார் பாரதி.

Bharathi Kannamma Episode Update 07.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி தலைவலியாக இருக்கிறது என சொல்லிவிட்டு சாப்பிட்டதும் படுத்துவிட்டார். ஆனால் அவர் தூங்காமல் தலைவலியால் அவதிப் பட்டுக் கொண்டிருக்க லைட்டைக் கூட ஆஃப் பண்ணாத இவர் என்ன செய்கிறார் என உள்ளே வந்து பார்த்த பாரதி புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருப்பதை பார்த்ததும் அவருக்கு பத்து போட்டு விடுகிறார்.

இதனையடுத்து மறுநாள் காலையில் பாரதி எழுந்ததும் நேராக வெளியே செல்ல அங்கே யோகாசனம் செய்து கொண்டிருந்த வாய்தா வடிவுக்கரசி இவரை பார்த்து பேய் என அலறுகிறார்‌. தூங்கி எழுந்ததும் மூஞ்ச கூட பார்க்காமல் அப்படியே எழுந்து வெளியே வந்து விடுவார்களா என கேட்க அதனால உங்களுக்கு என்ன என சொல்லிவிட்டு பாரதி வாக்கிங் செல்கிறார். வாக்கிங் சென்ற பாரதியை எல்லோரும் பார்த்து சிரிக்க ஒரு கட்டத்தில் ஆட்டோ டிரைவர் வர அவரும் பார்த்து சிரிக்கிறார். பிறகு கண்ணாடியைப் பார்த்த பாரதியின் நெற்றியில் பற்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு ஆட்டோவில் ஏறி வீட்டில் விட்டுவிடுமாறு கூறுகிறார்.

வீட்டுக்கு வந்த பாரதி தூங்கிட்டு இருக்கும்போது மிளகாய்த்தூளை யாராச்சு என் தலையில போட்டு இருக்க என கோபப்பட அதன்பிறகு கண்ணம்மா கொஞ்ச நேரம் யோசிச்சு பேசுங்க மிளகாய் தூள் போட்டா இப்படி நின்னு பேசிட்டு இருக்க முடியுமா? சும்மா பேசணும்னு பேசாதீங்க. நீங்க தானே நீர் கொடுத்துட்டு தலைவலியா இருக்கு னு சொன்னீங்க காலையில் எழுந்ததும் உங்களுக்கு தலைவலி இருந்ததா என கேட்டேன் பாரதி இல்லை என சொல்கிறார். அதற்குக் காரணம் உங்க தலையில இருக்கிற பற்று தான் என சொல்ல அதன் பிறகு பாரதி உள்ளே சென்று அமர்ந்து சாமியார் சொன்னதை யோசித்துப் பார்க்கிறார். ‌‌

அதன்பிறகு லட்சுமி கண்ணம்மாவுக்கு போன் செய்து ஹேமா தன்னை திருடி என சொன்னதை சொல்லி வருத்தப்படுகிறார். இந்த நேரத்தில் சௌந்தர்யா வந்து நீ போய் விளையாடு என லஷ்மியை அனுப்பி விட்டு போனை வாங்கி கண்ணம்மாவிடம் பேசுகிறார். குழந்தைகள் சண்டை எல்லாம் ஒரு விஷயமே இதுக்கெல்லாம் நீ வருத்தப்படாதே பாரதியோட சந்தோஷமா இரு. நான் குழந்தைகளை பார்த்துக்கறேன் என கூறுகிறார். பிறகு பாரதி ஏதாவது சண்டை போட்டானா எனக் கேட்க இல்ல எதுவும் செய்யல, முன்னை விட இப்போ கொஞ்சம் சாந்தமாக தான் இருக்கிறார் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு என சொல்ல சௌந்தர்யா மகிழ்ச்சி அடைகிறார்.

No

இந்த பக்கம் வெண்பா மீண்டும் மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளைப் பார்க்க ரூமிற்குள் சென்று அமர்கிறார். பேஷண்டை உள்ளே அனுப்புமாறு நர்சிடம் சொல்ல அவர் உங்களுக்கு தடைபோட்டு இருக்கிறார்களே என சொல்ல அதை எல்லாம் நீ சொல்லாத அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என கூறுகிறார். பிறகு முதல் பேஷன்ட் உள்ளே வந்து அமர்கிறார்.

மாஸ்க்கை கொஞ்சம் விலக்கியபோது வெண்பாவை பார்த்த பேஷண்ட் நீங்க கருக்கலைப்பு கேஸ்ல ஜெயிலுக்கு போன வெண்பா தானே, உங்களை எப்படி வெளியே விட்டாங்க? நீங்க மருத்துவம் பார்க்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க அப்புறம் எப்படி பார்க்கிறீங்க என கேள்வி மேல கேள்வி கேட்க வெண்பா விருப்பம் இருந்தா ட்ரீட்மெண்ட் பாருங்க இல்லனா வெளியே போங்க என அந்த பெண்மணியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார். வெளியில் இருப்பவர்களிடம் இந்த விஷயத்தை சொல்ல அனைவரும் வெண்பாவை திட்டுகின்றனர். மருத்துவம் பார்க்க வந்த எல்லோரையும் வெளியே தள்ளுகிறார் வெண்பா. அனைவர் முன்பும் மீண்டும் அசிங்கப்பட்டதால் கடும் கோபம் அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.