வெண்பாவுக்கு தாலி கட்ட போன ரோஹித்துக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் எல்லோரும் பாரதியை நிற்க வைத்து கேள்வி கேட்கின்றனர். அன்னைக்கு ஹாஸ்பிடலில் தீவிரவாதிகள் பாம் கட்டி தொங்கவிட்டபோது கண்ணம்மா உயிரை பணயம் வைத்து உன்னை காப்பாற்றினான். பழையதை மறந்து விட்டு அவளுடன் சேர்ந்து வாழ எல்லோரும் கெஞ்சியும் நீ முடியாது என சொல்லிட்ட. ஆனா இப்போ வெண்பாக் கழுத்துல தாலி கட்ட வந்திருக்கேன் இதுக்கு பேரு என்ன என கேட்க பாரதி பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார்.

ஒவ்வொருத்தரும் நீ எனக்கு புள்ளையே இல்ல அண்ணனே இல்ல என பாரதியை திட்டி தீர்க்க அப்போது வரும் லட்சுமி, ஹேமா உங்களை பார்த்தாலே புடிக்கல ஐ ஹேட் யூ என சொல்லி விடுகின்றனர். இன்னும் எவ்வளவு பொய்தான் என்கிட்ட சொல்ல போறீங்க இனிமே என்கிட்ட பேசாதீங்க நான் உங்கள டாடி என்று கூப்பிட மாட்டேன் நீங்களும் என்னை பேர் சொல்லி கூப்பிடாதீங்க என ஹேமா அதிர்ச்சி கொடுத்து கண்ணம்மாவை இழுத்துக் கொண்டு வெளியே சென்று விடுகிறார். எல்லோரும் என் முகத்திலேயே முழிக்காத என சொல்லிவிட்டு வெளியே போக பாரதி தனி மரமாக தவித்து நிற்கிறார்.

பிறகு வெண்பா பாரதி என பேச வர பேசாத இனிமே என் முகத்திலேயே முழிக்காத உன்னால நான் நடுத்தெருவுல நிற்கிறேன் என கோபப்பட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு இனிமே உன்னை யாரு கட்டிக்கவா என ஷர்மிளா கண்கலங்க நான் இருக்கேன் என ரோகித் குரல் கொடுக்கிறார். வெண்பா மேல நான் உயிரையே வச்சிருக்கேன், அவ வயித்துல வளர்வது என்னுடைய குழந்தை என சொல்லி தாலி கட்ட தயாராகிறார்.

பிறகு ரோஹித்தின் அம்மா அவ உன்ன ஏமாத்திட்டு போனவ அவ வேண்டாம் என சொல்ல ஒரு வழியாக அம்மாவையும் சம்மதிக்க வைத்து வெண்பா கழுத்தில் தாலி கட்ட போக கடைசி நொடியில் ஸ்டாப்பிட் ரோகித் என நிறுத்துகிறார் வெண்பா. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.