![images (32)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-32-2-696x391.jpeg)
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறியது ஏன் என் விளக்கம் அளித்துள்ளார் விஷால்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஷால்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-31-1.jpeg)
எப்போதும் அம்மாவுக்கு சப்போர்ட்டாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு நிறைய பெண் ரசிகைகள் இருக்கின்றனர். இப்படியான நிலையில் திடீரென விஷால் இந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக நவீன் எழிலாக நடிக்க தொடங்கி உள்ளார்.
விஷால் ஏன் வெளியேறினார் என ரசிகர்கள் குழப்பம் அடைந்து இருந்த நிலையில் தற்போது விஷால் விளக்கம் கொடுத்துள்ளார்.
சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் எடுத்த முடிவை சரியானதாக மாற்றிக் கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-33-2.jpeg)
மேலும் விஜே விஷால் சேப்டர் 2 எனவும் விரைவில் புதிய ப்ராஜெக்ட் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.