கண்ணம்மாவுடன் பாரதி தென்காசிக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றிருக்க சந்தியாவுக்கு எதிராக ஊர் மக்கள் கிளம்பி உள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகிறது பிரபலமான சீரியல்கள் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி உள்ளிட்டவை இன்று முதல் மெகா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாகிறது.

இன்றைய எபிசோட்டில் பாரதி கண்ணம்மா வீட்டுக்கு சென்று கண்ணம்மா மற்றும் லட்சுமி அழைத்துக்கொண்டு காரில் கிளம்புகிறார். குழந்தைகளுடன் இருவரும் பழசை மறந்து ஜாலியாக வெளியே சென்று உள்ளனர். இருவரும் லாங்க் டிரைவ் காரில் செல்லலாம் என சொல்ல இந்த ரோடு எங்கே போகிறது என ஹேமா கேட்கிறேன் பாரதி தென்காசிக்கு செல்கிறது என சொல்ல தென்காசிக்கு போகலாம் என குழந்தைகள் சொல்ல கண்ணம்மாவும் சரி என கூற அனைவரும் தென்காசிக்கு பயணம் மேற்கொள்கின்றனர். ‌

இந்த பக்கம் சாமியார் ஊர் முழுக்க சிறப்பு பூஜை இருக்குன்னு சொல்ல அதை தண்டூரா போல சிவகாமி குடும்பத்தோட பூஜையில் கலந்து கொண்டு சாமியார் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற வேண்டும் என கூறுகிறார். இது எல்லாத்துக்கும் காரணம் சந்தியா தான் என அர்ச்சனா மூட்டி விடுகிறார். சிவகாமி உங்களுக்கும் சேர்த்து தான் சொன்னேன் கிளம்பி வாங்க அங்க வந்து வில்லத்தனம் ஏதாவது பண்ணணும்னு யோசிக்காதீங்க என கூறுகிறார்.

காரில் செல்ல வழியில் ஹேமா வயிறு ஒரு மாதிரி இருக்கு என சொல்ல அவரை அழைத்துக் கொண்டு கண்ணம்மா பாத்ரூம் செல்ல லட்சுமி வாந்தி வருவதாக வாந்தி எடுக்க அவருக்கு உதவி செய்கிறார் பாரதி. ஒரு கட்டத்தில் லட்சுமி பாரதி மீது வாந்தி எடுத்துவிட அதையெல்லாம் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் லட்சுமியை தேற்றுகிறார். பிறகு ஹோட்டல் இல் இருந்து வெளியே வந்த கண்ணம்மா லட்சுமியை பார்த்து திட்ட பாரதி குழந்தை எதுக்கு இப்ப நானும் இப்படித்தான் பத்து வயசு வரைக்கும் காரின் போனா வாந்தி எடுப்பேன் என சொல்ல கண்ணம்மா இந்த பழக்கம் உங்க அப்பா கிட்ட இருந்து தான் வந்து இருக்கா என மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார்.

பிறகு எல்லோரும் சேர்ந்து ஒரு வழியாக தென்காசி சென்று விடுகின்றனர். தென்காசிக்கு போன இவர்கள் சந்தியா சரவணனை எதர்ச்சையாக பார்க்கின்றனர். பிறகு எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சாமியார் பேசுவதை கேட்க அவர் கோவில் கட்ட போட இருந்த பூமி பூஜையை தான் சிலர் கோர்ட்டுக்கு போய் தடுத்து நிறுத்த முடியும் ஆனால் இந்த சிறப்பு பூஜை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என சொல்ல ஊர் மக்கள் எல்லோரும் சந்தியா மற்றும் சிவகாமி குடும்பத்தாரை சுற்றி வளைத்து திட்ட தொடங்குகின்றனர். இத்துடன் இன்றைய மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.