இளையராஜாவின் மகள் பவதாரணி காலமாகியுள்ளார்.
இந்திய திரை உலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இதுவரை பல ஆயிரம் படங்களுக்கு இசையமைத்துள்ள இவரின் மகள் தான் பவதாரணி.
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் இலங்கையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் திடீரென உடல் நலனில் தொய்வு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு இளையராஜா குடும்பத்தில் திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.