அவமானத்தில் பாக்கியா படிக்க கிளம்ப முடிவு எடுக்க இதனை ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் சமீப நாட்களாகவே நிறைய சந்தர்ப்பங்களை பார்க்க முடிகிறது.

குறிப்பாக இனியாவின் ரிசல்ட் வரும்போது பாக்யா சமைக்கப் போன இடத்தில் செல்போன் டவர் இல்லாமல் இங்கு அங்குமாக அலைந்ததும், பாயாசம் சரியில்லை என கல்யாணத்தை நிறுத்த போவதாக மாப்பிள்ளை குடும்பத்தார் சொன்னதெல்லாம் கொஞ்சமும் லாஜிக் இல்லாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது டிகிரி முடித்திருந்தால் தான் லோன் என பேங்கில் சொல்வதால் பாக்கியா படித்து முடிவெடுப்பது போல கதைக்களம் அமைய உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் இது அது இல்ல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமி சீரியல் அமுதா படிப்பறிவு இல்லாததால் தனக்கு ஏற்படும் அவமானங்கள் திருமணத்திற்கு பிறகு படிக்க கிளம்பியுள்ளார். படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பது போல இந்த சீரியலில் தொடர்ந்தே பல புரட்சிகளை செய்து வருகின்றனர்.

தற்போது இதே ரூட்டைத் தான் பாக்கியலட்சுமி சீரியலும் கையில் எடுத்துள்ளது. பாக்கியாவும் இனியாவிடம் பேசும்போது படிக்க வயது தடை இல்லை என சொல்கிறார். இதையெல்லாம் வைத்து ரசிகர்கள் என்ன டைரக்டர் சார் கதையை கொண்டு போக தெரியாமல் அடுத்த கதையை காப்பி அடிக்க ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா என்று கிண்டல் அடிக்க தொடங்கியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.