பாக்யாவிடம் ராமமூர்த்தி சத்தியம் வாங்க ராதிகா முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி கோபியுடன் வந்து நிற்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்‌.

பிறகு எழில் சத்தம் போட ஈஸ்வரி யாரும் எதுவும் பேசக்கூடாது கோபி உடம்பு சரி ஆகுற வரைக்கும் இங்க தான் இருப்பான் என இனிய மற்றும் செழியனை ரூமுக்கு கூட்டிப் போக சொல்ல எழில் அப்படின்னா அம்மாவும் இனியாவும் ஹால்ல வந்து படுத்துப்பாங்களா என்று கேள்வி கேட்க யாரும் யாருடைய ரூமையும் விட்டுக் கொடுக்க வேண்டாம் கோபி என்னுடைய ரூம்ல இருக்கட்டும் என ரூமுக்கு என கூட்டிப் போகச் சொல்ல இருவரும் கூட்டிச் செல்கின்றனர்.

பிறகு ரூமுக்கு வரும் ஈஸ்வரி நீ இங்கதான் இருக்கணும், நீ திரும்பவும் அந்த வீட்டுக்கு போனின்னா உன்னை நினைத்து வருத்தப்பட்டு எனக்கு ஏதாச்சு ஆகிடும் என்று சொல்ல கோபி அப்படியெல்லாம் பேசாதீங்க அம்மா நான் இங்கேயே இருக்கேன் என ஒப்புக் கொள்கிறார்.

இங்கே பாக்கியா வீட்டை விட்டு கிளம்புறேன் என்று கிளம்ப ராமமூர்த்தி நீங்க இந்த வீட்டை விட்டு போகக்கூடாது கோபிக்கு உடம்பு சரி ஆனதும் நானே கூட்டிட்டு போய் விட்டேன் என தன்னுடைய தலையில் அடித்து சத்தியம் வாங்குகிறார்.

மறுபக்கம் ராதிகாவின் அம்மா மயூவிடம் கோபி வீட்டை விட்டு பல விஷயத்தை சொல்ல ராதிகா கோபப்படுகிறார். போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்ல ராதிகா நான் எங்கேயும் வரமாட்டேன் விருப்பமில்லாதவரை இழுத்து பிடித்து கூட்டிட்டு வர வேண்டாம் என சொல்லிவிட்டு ரூமுக்குள் சென்று விடுகிறார்.

இங்கே வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது மாலினி வீட்டுக்கு வர செழியன் அதிர்ச்சி அடைகிறார். மாலினி செழியன் இடம் பேசுவதை எல்லாம் பார்த்து செல்வி என்னக்கா இந்த பொண்ணு அடிக்கடி வீட்டுக்கு வருது ஏதோ தப்பா இருக்கே என்று சொல்ல பாக்கியாவும் எனக்கும் அப்படித்தான் தோணுது என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.