பாக்யாவுக்கு கணேஷ் வார்னிங் கொடுக்க செழியனுக்கு மீண்டும் ஆப்பு வைத்துள்ளார் மாலினி.
தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கணேஷ் கேண்டின் வர பாக்கியா அதிர்ச்சி அடைந்து அமிர்தாவை உள்ளே போய் ஸ்வீட் ரெடி பண்ண சொல்லு என்று அனுப்பி வைத்து வெளியே வந்து கணேஷை தனியாக அழைத்துச் சென்று இங்கு எதற்கு வந்த என கேள்வி கேட்கிறார்.
நான் தான் ஏற்கனவே டைம் கேட்டிருக்கேன்ல என்று பாக்யா சொல்ல ஆனா இதுவரைக்கும் நீங்க எதுவும் செஞ்ச மாதிரி தெரியல நீங்க கொடுத்த டைம் முடிந்துவிட்டது என்றால் நான் செய்ய வேண்டியதை செய்வேன் என்று வார்னிங் கொடுத்துவிட்டு கிளம்பி செல்கிறார்.
அதைத்தொடர்ந்து செழியன் ஜெனியின் அப்பா ஜோசப்பை பார்க்க சென்று காபி ஷாப் ஒன்றில் காத்திருக்க திடீரென மாலினி எதிரே வந்து அமர்ந்து அதிர்ச்சி கொடுக்கிறார். செழியன் கோபப்பட்டு இங்கிருந்து கிளம்பு, ஜெனியோட அப்பா என்ன பாக்க வராரு நான் அவர்கிட்ட பேசி இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டணும் என்று சொல்லிக் கொண்டிருக்க மாலினி தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் ஜெனியின் அப்பா அங்கு வந்து விட இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார். மாலினி தன்னை அறிமுகம் செய்து கொண்டு செழியனுக்கு நானும் வேண்டும் ஜெனியும் வேண்டும், நான் கிளம்புறேன் என்று சொல்லியும் செழியன் தான் பேசிக்கிட்டே இருந்தான். சரி நீ பேசி முடிச்சுட்டு வீட்டுக்கு வந்துடு என்று சொல்லி மாலினி கிளம்பி செல்ல ஜெனியின் அப்பா எல்லாவற்றையும் தவறாக புரிந்து கொண்டு உனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கணும் தான் பேச வந்தேன் ஆனால் இனி என்ன செய்யணுமோ அதை செய்கிறேன் என கிளம்பி செல்கிறார்.
அதைத்தொடர்ந்து பாக்யா செழியனுக்காக காத்திருக்க வீட்டுக்கு வந்த செழியன் பாக்யாவை கட்டிப்பிடித்து நடந்த விஷயங்களை சொல்லி கண் கலங்கி இனிமேல் நானும் ஜெனியும் சேர வாய்ப்பே இல்லை என அழுகிறார். என் குழந்தை கூட என்னால இருக்க முடியாது என கண்கலங்க பாக்கியா நிச்சயம் நீ நினைக்கிறது எல்லாம் நடக்கும் கொஞ்சம் பொறுமையாக இரு என ஆறுதல் கூறுகிறார்.
மறுபக்கம் வீட்டுக்கு வந்த ஜோசப் ஜெனி மற்றும் மரியமை கூப்பிட்டு செழியன் திருந்தவே மாட்டான் இப்பவும் அந்த பொண்ணு கூப்பிட்டு வச்சு பேசிகிட்டு தான் இருக்கான் தப்பு மேல தப்பு பண்ணிட்டு இருக்கான் அவன் நமக்கு வேண்டவே வேண்டாம் தூக்கிப்போடு ஜெனி என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.