செழியனுக்கு செக்மேட் வைத்துள்ளார் பாக்கியா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா மாலினி சந்தித்து விட்டு வீட்டிற்கு வந்து ஈஸ்வரியிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் செழியனை தனியாக கூப்பிட ஈஸ்வரி உனக்கு வீட்ட பத்தி கவலையே கிடையாது என கோபப்படுகிறார்.
பேண்ட் விஷயமா செழியன் கூப்பிடுவதாக சொல்லி அழைத்துச் சென்று பளார் பளார் என அறைந்து ஜெனி இடம் எல்லாம் நீயே சொல்லிட்டு அதுவரைக்கும் நான் உன்கிட்ட பேசமாட்டேன் ஜெனி என்ன முடிவு எடுத்தாலும் நான் அவ பக்கம் தான் நிற்பேன் என அதிர்ச்சி கொடுக்கிறார்.
பிறகு செழியன் ஜெனி இடம் உண்மையை சொன்னால் முயற்சி செய்ய முடியாமல் போகிறது.ஜெனியும் குழந்தையும் காட்டும் அன்பை பார்த்து செழியன் தப்பு பண்ணிட்டேன் பெரிய தப்பு பண்ணிட்டேன் என கலங்கி தவிக்கிறார்.
அதைத் தொடர்ந்து பாக்யா எல்லோருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருக்கும் போது மாலினி வீட்டிற்கு வர பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.