பாக்கியாவிடம் அசிங்கப்பட்டுள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ஃபுட் ஆர்டர் செய்திருக்க டெலிவரி பாய் வீட்டுக்கு வந்து இருக்கேன் கோபி என்ற பெயரில் இங்கு யாரும் இல்லை என ராமமூர்த்தி சொல்லிவிடுகிறார்.

பிறகு டெலிவரி பாய் கோபிக்கு போன் செய்து ஃபுட் எடுத்துட்டு வந்து இருக்கேன் ஆனா இந்த வீட்ல கோபி என்ற பெயரில் யாரும் இல்லை என சொல்றாங்க என சொன்னது கோபி இருங்க என சொல்லி கீழே வந்து புட்டை வாங்கிக் கொண்டு கோபி நீ எங்க வீட்ல யாரும் இல்லன்னு ஏன் சொன்னீர்கள் என்று கேட்க கோபி ஒரு ஆளே இல்லன்னு கூட சொல்லுவேன் என ராமமூர்த்தி கோபப்படுகிறார்.

அதற்கு அடுத்ததாக ஜெனி மற்றும் செழியன் இருவரும் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருக்க இங்கு வரும் கோபி இருவரிடமும் நலம் விசாரிக்க ஜெனி பதில் ஏதும் சொல்லாமல் கீழே சென்று விடுகிறார். பிறகு செழியன் உங்களுக்கு மத்தவங்க மேலயும் அக்கறை இருக்கா? நீங்க மட்டும் சந்தோஷமா இருங்க என சொல்லி கீழே வருகிறார்.

மறுநாள் காலையில் பாக்யா வாக்கிங் செல்ல கூட வந்த எழில் உனக்கு வீட்டில இவ்வளவு நடந்து இருக்கே, வருத்தமாக இல்லையா நீ நல்லா இருக்கியா என கேட்க அதையெல்லாம் நினைத்து வருத்தப்பட எனக்கு நேரமில்லை பிஸியா ஓடிக்கிட்டு இருக்கேன் என சொல்கிறார். வாழ்க்கை எனக்கு அடிச்ச அடி அப்படி, ஆனா இப்ப இருக்கிறது தான் எனக்கு பிடிச்சிருக்கு சந்தோஷமா இருக்கேன் என சொல்கிறார்.

பிறகு இருவரும் மீண்டும் நடக்க தொடங்க கோபி எதிரில் வந்து பாக்யாவை மறைத்து விட்டு அங்கிருந்து நகர எழில் கோபப்பட ரோட்டில் பல பேரை பார்ப்போம். அவங்க முறைக்கிறாங்க என்பதுக்காக எல்லாம் நாம கவலைப்பட்டுட்டு இருக்க முடியாது என சொல்ல எழில் நீ தேரிட்ட ரொம்ப மெச்சூர் ஆகிட்ட என பாக்யாவை பாராட்டுகிறார்.

பிறகு பாக்கியா காபி போட்டு எல்லோருக்கும் கொடுக்க கோபி அந்த சமயம் வீட்டுக்கு வர காபி வாசனையை பார்த்து ஆஹா காப்பி என செல்விக்கு வைத்திருந்த காபியை எடுத்து விடுகிறார். பிறகு எதிரே பாக்கியா நிற்பதை பார்த்து அவமானப்பட்டு காபியை கீழே வைத்து விட்டு ரூமுக்கு சென்று விடுகிறார்.

அங்கு ராதிகா ஹாயாக படுத்து தூங்க கோபி நீ மட்டும் சந்தோஷமா தூங்கு எங்க இருந்து தான் உனக்கு மட்டும் தூக்கம் வருதோ? நீ தூங்குறது ஒரு விதத்துல நல்லது தான் எழுந்தா கீழ போய் ஏதாவது சண்டையை இழுத்துகிட்டு வருவ என புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.