BaakiyaLakshmi Serial Today Episode Update
BaakiyaLakshmi Serial Today Episode Update

அமிர்தாவின் அம்மா சொன்ன வார்த்தையால் ஈஸ்வரி முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செல்வியிடம் நீ என்னோட ஸ்கூட்டர் எடுத்து ரெஸ்டாரண்ட் போ என் நான் போயிட்டு வந்துடறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க சரி என்று அமைதியாக சொல்லுகிறார். என் சத்தமா சொல்லல என்று கேட்க முன்னாடி எல்லாம் எங்க போனாலும் என்னை கூட்டிகிட்டு போவ இப்ப எல்லாம் என்ன விட்டுட்டு போறேன் என்று சொல்ல என்ன பண்றது செல்வி நானும் கூட்டிட்டு போகணும்னு தான் நினைக்கிறேன் ஆனா வேலை நிறைய இருக்கு அவ இன்னொரு வாட்டி டான்ஸ் ஆடும் போது நான் கண்டிப்பா கூட்டிகிட்டு போறேன் என்று சொல்ல சரிக்கா என்று சொல்லிவிட அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி வருகிறார். என்னம்மா நீங்க இன்னும் ரெடியாகலையா என்று செல்வி கேட்க அதான் ரெடி ஆயிட்டேனே என்று சொல்லுகிறார் இது வீட்ல கட்டுகிற புடவை நல்ல புடவை கட்டிட்டு வரலாம் அல்ல என்று சொல்ல எனக்கு இதுவே போதும் செல்வி என்று சொல்லிவிடுகிறார்.

உடனே பாக்யா அவரை ரூமுக்கு அழைத்துச் சென்று அவருக்கு எடுப்பான புடவை எடுத்து செலக்ட் பண்ணி கொடுத்துவிட்டு இதை தான் நீங்க கட்டணும் என்று வற்புறுத்தி சொல்லிவிட்டு வர ஈஸ்வரியும் அதனை கட்டிக் கொண்டு வருகிறார். நெத்தியில் பொட்டு இல்லாததை பார்த்த பாக்யா ஈஸ்வரிக்கு பொட்டு எடுக்கப் போக அதெல்லாம் எனக்கு வேணாம் பாக்கியா என்று ஈஸ்வரி மறுக்கிறார். மாமாக்கு நீங்க எப்படி இருந்தா பிடிக்குமோ அப்படித்தான் இங்கு இருக்க வேண்டும் என்று வாக்குறுதி பொட்டு வைத்துவிட்டு சரி நான் கிளம்புறோம் என்று ரெடி பண்ணி எழுந்து நிற்க அந்த நேரம் பார்த்து அமிர்தாவின் அம்மா வருகிறார்.

எங்கேயாவது கிளம்பிட்டீங்களா நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா வந்து சொல்ல, ஆமாம் என்று சொன்னவுடன் அமிர்தாவின் அம்மா முகம் மாறுகிறது. நீங்க பேசிக்கிட்டுருங்க நான் போயிட்டு டீ எடுத்துகிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு, பாக்கியா கிச்சனுக்கு வர செல்வி அம்மா வெளியே போறாங்கன்னு தெரிஞ்ச உடனே அமிர்தா ஓட அம்மா முகம் மாறுச்சு பாத்திங்களா என்று கேட்க நான் கவனிக்கல அவங்களோட முகம் ஏன் மாறனும் என்று கிச்சனிலிருந்து அவர்கள் பேசுவதை இருவரும் பார்க்கின்றனர்.

அமிர்தாவின் அம்மா நான் சொல்றத தப்பா நினைச்சுக்காதீங்க ஒரு வீட்ல ஒருத்தவங்க இறந்தா ஒரு வருஷத்துக்கு வெளிய போக கூடாது நல்ல விஷயத்துக்கு கலந்துக்க கூடாது என்றெல்லாம் ஈஸ்வரியிடம் பேசுகிறார் அமிர்தாவின் அம்மா. இதையெல்லாம் கேட்ட ஈஸ்வரி அமைதியாக எழுந்து உள்ளே சென்றுவிட கிச்சனிலிருந்து கோபமாக வந்த பாக்யா நீங்க எதுக்கு இதெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க ஒருத்தவங்க போயிட்டா அப்படியே உட்கார்ந்து இருக்கணுமா அவங்க கஷ்டத்துல இருந்தாங்க நான் தான் உங்களை வற்புறுத்தி வர சொன்ன இப்ப அதுல என்ன பிரச்சனை என்று கோபமாக பேசுகிறார் நான் என்ன தப்பா சொன்னேன் ஊர்ல என்ன பேசுவார்களோ அதை தானே சொன்னேன் என்று சொல்ல ஊர்ல ஆயிரம் பேசத் தொடங்க அவங்க ஒரு வழியில் இருக்கிறார்கள் அதில் இருந்து வெளியே வரவேண்டும் தான் நாங்க நினைக்கிறோம் என்று அமிர்தாவின் அம்மாவிடம் கோபமாக பேசி பாக்கிய அனுப்பி வைத்துவிட்டு ஈஸ்வரியிடம் வருகிறார் அவர் புடவை மாற்றிக் கொண்டு நீ பங்க்ஷனுக்கு போயிட்டு வாக்கியம் நான் வரல என்று சொல்லிவிடுகிறார். செல்வி நீ போயிட்டு வாக்கா நான் வீட்டில பார்த்துக்கிறேன் என்று சொல்ல உனக்கு கிச்சன்ல வேலை இல்லையா என்று ஈஸ்வரி கேட்கிறார் அதெல்லாம் ஆளுங்க இருக்காங்க அம்மா நான் வீட்ல உங்க கூட இருப்பேன் என்று சொல்லுகிறார்.

சரி என்று பாக்கியா கிளம்பி டான்ஸ் ஆடும் இடத்திற்கு வர ஜெனி வெளியில் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து பாக்யா வர ஏன் ஆன்ட்டி இவ்வளவு லேட்டு என்று கேட்க இனியா டான்ஸ் ஆடிட்டாளா என்று பாக்கியா கேட்கிறார் இல்ல வண்டி வாங்க போலாம் என்று ஈஸ்வரியை கேட்க நான் அப்புறமா சொல்றேன் வா போலாம் என்று பாக்யா கூட்டி செல்கிறார் உள்ளே வந்தவுடன் எழில் மற்றும் செழியன் உட்கார்ந்து கொண்டிருக்க அவர்களும் பாட்டியை பற்றி விசாரிக்க நான் அப்புறம் சொல்லுகிறேன் என்று சொல்லி விடுகிறார். பிறகு அனைவரும் டான்ஸ் ஆட கைத்தட்டி ரசிக்கின்றனர் இனியாவின் பெயரை சொன்னவுடன் கோபி எழுந்து கைத்தட்டி உற்சாகப்படுத்த பாக்யா ஒரு பக்கம் நல்ல ஆடிடனும் என்ற டென்ஷனாக இருக்கிறார்.

இனியா டான்ஸ் ஆடி முடிக்க அனைவரும் கைத்தட்டி சந்தோஷப்படுகின்றனர். அடுத்ததாக மீதி இரண்டு பேர் இருக்க அவர்களும் டான்ஸ் ஆடுகின்றனர்.

இனியா செலக்ட் ஆனாரா? பாக்கியா சொன்ன வார்த்தை என்ன? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.