ரெஸ்டாரன்ட் ஓப்பனிங்கிற்கு அமைச்சரை வரவிடாமல் தடுக்க குட்டையை குழப்பியுள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கோபி அவருடைய நண்பர் சதீஷை சந்தித்து பாக்கியா ரெஸ்டாரன்ட் ஆரம்பிப்பது பற்றி கடுப்பாக பேசிக்கொண்டிருக்க அப்போது சதீஷின் கசின் போன் செய்து ஸ்கூல் திறப்பு விழாவிற்கு சுகாதாரத் துறை அமைச்சரை அழைக்க வேண்டும் அதற்காக உதவி செய்யுமாறு கேட்க கோபி பாக்யா ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கும் அதே தேதியில் ஸ்கூல் annual டேவும் நடப்பதால் அமைச்சரை அங்க போக வைத்து விட்டால் பாக்யாவை அவமானப்படுத்தி விடலாம் என்று பிளான் போட்டு பிஏ நம்பரையும் வாங்குகிறார். 

பிறகு இவர்கள் இருவரும் பிஏவை சந்தித்து அமைச்சரை நிகழ்ச்சிக்கு கூப்பிட அன்னைக்கு அவங்களுக்கு வேற ஒரு இடத்துல அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு என்று சொல்கிறார். உங்களுக்கு ஏதாவது பணம் கூட தருகிறோம். ஆனால் அமைச்சரை இந்த நிகழ்ச்சிக்கு எப்படியாவது வர வைக்க என கோபி பிஏ-வை வழிக்கு கொண்டு வருகிறார். நீங்க சொன்ன டேட்ல சொன்ன டைமுக்கு அமைச்சர் அங்க இருப்பாங்க என்று பிஏ சொல்லி அனுப்புகிறார்.

அடுத்து வீட்டில் யார் யாருக்கு பத்திரிக்கை கொடுப்பது என லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்க அப்போது கோபி வர ராமமூர்த்தி ஒருவருக்கு போன் செய்து பாக்கியா ரெஸ்டாரன்ட் ஆரம்பிப்பது பற்றி சொல்லி நிகழ்ச்சிக்கு கூப்பிட கோபி அங்கு வந்து அமைச்சர் வருவாங்களா என்று கேட்டு மறைமுகமாக ஆப்பு வைத்திருப்பதை சொல்ல அதை யாரும் புரிந்து கொள்ளாமல் இருந்து விடுகின்றனர். 

பிறகு கிச்சனில் பாக்யா ராதிகாவை நிகழ்ச்சிக்கு கூப்பிட என் புருஷன அவமானப்படுத்திட்டு என்னை எப்படி நிகழ்ச்சிக்கு கூப்பிடுறீங்க என்று கேட்க எல்லாத்துக்கும் ஒரு பொறுமை இருக்கு எல்லாருக்கும் காயப்படும். நான் உங்க புருஷனை அவமானப்படுத்தினேனு சொல்றீங்க இதே வீட்ல என்ன அவரு பல்லாயிரம் தடவ என்னை அவமானப்படுத்தி பேசி இருப்பாரு, பிரிஞ்சதுக்கு அப்புறமும் நான் எதுவுக்கும் லாயக்கு இல்லன்னு வித விதமா சொல்லி அவமானப்படுத்த முயற்சி பண்ணிக்கிட்டு தான் இருக்காரு. அந்த மாதிரி சமயத்துல பொறுமைய இழந்து பேசற வார்த்தைகள் தான் அது என சொல்கிறார். எல்லாருக்கும் ஹர்ட் ஆகும், ஞானி ஆக இருந்தாலும் ஓரளவுக்கு தான் பொறுக்க முடியும் என பதிலடி கொடுக்கிறார்.

மேலும் நான் இப்போ அவருடைய மனைவியா உங்கள கூப்பிடல எனக்கு நீங்க ஆரம்பத்துல உதவி செஞ்சி இருக்கீங்க அந்த நன்றி கடனுக்காகத்தான் நான் உங்கள கூப்பிடுறேன். வருவதும் வராததும் உங்களுடைய விருப்பம் என்று சொல்லி அங்கிருந்து நகர்கிறார். பிறகு ஜெனியின் விவாகரத்து கேஸ் குறித்து ஞாபகத்துக்கு வர பாக்யா எதுவாக இருந்தாலும் நீ யோசிச்சு முடிவெடு என்று ஜெனிக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.