பாக்கியாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய கோபிக்கு எதிர்பாராத அதிர்ச்சி கொடுத்துள்ளார் எழில்.
Baakiyalakshmi Serial Episode Update 11.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாக்கியலட்சுமி. கோபி வீட்டு முன்பு பாக்கியா கொடுக்க வேண்டி பணத்தை கொடு என அனைவரும் ஒன்றுகூடி பிரச்சனை செய்ய தொடங்கினர்.
தமிழகத்தில், 2-வது டோஸ் தடுப்பூசி : சுகாதாரத்துறை முக்கிய தகவல்
பாக்யாவின் மாமனார் தன்னுடைய பென்ஷன் படத்தை கொடுப்பதாக கூறி ஆகியவை அழைத்துக்கொண்டு பேங்கிற்கு சென்றார். வங்கியில் சொந்த பிரான்ச்சில் தான் பணம் எடுக்க முடியும் என கூறி விட்டனர். வீட்டுக்கு வந்ததும் அனைவரும் பணம் கேட்க அவருடைய மாமனார் பணத்தை எடுக்க முடியவில்லை. ஒரே ஒரு நாள் அவகாசம் கொடுங்க திருநெல்வேலி போயிட்டு பணத்தை எடுத்துட்டு வந்து விடுவேன் என கூறுகிறார். ஆனால் பணம் எப்போது வேண்டும் என அனைவரும் அடம் பிடிக்கின்றனர்.
இதனால் கடுப்பான கோபி பாக்கியாவை உள்ளே அழைக்கிறார். இனியா அழுது கொண்டிருப்பதை பாரு.. அம்மா எப்படி கஷ்டப்படுறாங்க பாரு. வயசான காலத்துல அப்பா உனக்காக போராடிட்டு இருக்காரு. இதெல்லாம் யாரால உன்னால தான். இனி என்னால பொறுமையா இருக்க முடியாது வெளியே போ. வீட்டை விட்டு வெளியே போ என கூறுகிறார். ஒரு கட்டத்தில் பாக்கியாவை தரதரவென இழுத்துச் சென்று வெளியே தள்ளுகிறார். இந்த நேரத்தில் எழில் வந்து பாக்கியாவை தாங்கி பிடிக்கிறார். கோபி அதிர்ச்சி அடைகிறார்.
பாக்கியா எழிலை பார்த்ததும் இன்னும் அழைக்கிறார். உன்னுடைய பணம் கிடைத்துடுச்சுமா என மூன்று லட்சத்தை எடுத்து கையில் கொடுக்கிறார். கோபிக்கு இன்னும் அதிர்ச்சி. அதன் பின்னர் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பதை பிரித்துக் கொடுத்து அனுப்புகின்றனர். பின்னர் பாக்கியா எழிலை கூட்டிக்கொண்டு உள்ளே செல்கிறார்.
இந்த மாதிரி இருக்கும்னு எதிர்பார்கல – Doctor DAY -2 Family Audience Review
இந்த பக்கம் அமிர்தாவின் அம்மா, அப்பா எழிலை தேடுகின்றனர். எழிலுக்கு போன் பண்ணி தா என அமிர்தாவிடம் கூறுகிறார் அவருடைய அம்மா. நமக்கு நம்ம மூணு பேரு தான். ஏன் தேவை இல்லாம மத்தவங்க மேல பாசத்த வைத்து இப்படி கஷ்டப்படுறீங்க என கூறிவிட்டு உள்ளே செல்கிறார். எழில் போனை எடுக்காதது பற்றி நினைத்து கோபப்படுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.