அப்பாவின் பேச்சையும் மீறி கோபி ராதிகாவுடன் நெருங்கி பழகுகிறார்.
Baakiyalakshmi Serial Episode Update 01.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபி ராதிகாவுடன் பழகுவது தெரிந்து அவருடைய அப்பா அவரை கண்டித்தார்.
இந்த நிலையில் கோபி தன்னுடைய நண்பர் ஒருவருடன் ரெஸ்டாரன்ட் ஒன்றில் 22 வயதில் பாக்கியாவை எனக்கு பிடிக்காமல் என்னப்பா கட்டி வைத்தார். இப்போ வரைக்கும் பாக்கியாவை என்னுடைய மனைவியாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்பவும் ராதிகா கூட பேசக்கூடாது என்று மிரட்டினார். ஆனா இந்த முறை நான் ராதிகாவை விடுவதாக இல்லை. அவளோட இருக்கும்போது சந்தோஷமா இருக்கு. நானா எங்க அப்பாவானு பார்த்து விடுகிறேன் என முடிவு செய்கிறார்.
ஆர்யன்கான் விவகாரம் : மத்திய அமைச்சரிடம், போதைப்பொருள் தடுப்பு அதிகாரி மனைவி மனு
இந்தப்பக்கம் எழில் பார்க் ஒன்றில் அமர்ந்து கதை எழுதிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் வந்த அமிர்தா அவரை டிஸ்டர்ப் செய்யாமல் ஓரமாக 10 நிமிடம் காத்துக்கொண்டிருக்கிறார். அதன்பிறகு அமிர்தாவை கவனித்த எழில் எப்ப வந்தீங்க என்று கேட்க நான் வந்து பத்து நிமிஷம் ஆகுது எனக் கூறுகிறார். பிறகு அமிர்தா எழிலுக்கு காபி கொடுக்கிறார். இருவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர். மனதுக்குள் எழில் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு அமிர்தா. கடைசி வரைக்கும் என் கூடவே இருப்பீங்களா என கேட்டுக் கொள்கிறார். பிறகு இருவரும் ஆபீஸுக்கு கிளம்புகின்றனர்.
ராதிகா வீட்டில் கோபி ராதிகாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். நாளைக்கு விவாகரத்து கேஸ் இருக்கு கோர்ட்டுக்கு போக வேண்டும் என கூறுகிறார். கோபி விவாகரத்து கண்டிப்பா கிடைத்துவிடும் என கூறுகிறார். நானும் உன்கூட கோர்ட்டுக்கு வரவா என கேட்கிறார். வந்தா நன்றாக இருக்கும் என ராதிகா கூறுகிறார். ராதிகாவின் கையைப் பிடித்து கோபி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் மய்யூ வந்துவிடுகிறார். ஆனால் அவர் இதை கண்டுகொள்ளவில்லை. புக் ஷாப்பிங் கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்களே என கேட்கிறார். சனிக்கிழமை போகலாமா என மயூ கேட்கிறார். ஞாயிற்றுக்கிழமை இனியா தாத்தா வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு என சொல்கிறார். பிறகு கோபி தீம் பார்க் கூட்டி போவதாக சொல்லி தன்னுடைய வீட்டிற்கு அவர்கள் வருவதை தடுத்து நிறுத்துகிறார்.
பிறகு ராதிகாவிடம் நீ எதற்கு அவங்க வீட்டுக்கு போகுற? அவர் கேட்டது நீ எதுக்கு உன்னோட பர்சனல் டீடைல்ஸ் கொடுக்கிற என கேட்கிறார். கோபி கோபமாக இருப்பதால் சரி நான் எங்கேயும் போகல என ராதிகா கூறுகிறார்.
இன்னொரு பக்கம் செழியன் ஃபுல்லாக குடித்துவிட்டு ஜெனி விட்டு வெளியில் இருந்து அவருக்கு இரண்டு முறை போன் செய்கிறார். ஜெனி போனை எடுக்காததால் வீட்டிற்குச் செல்கிறார்.
கம்மல் முதல் கண்ணாடி வரை.. வைரத்தில் கிடைக்காத பொருளே இல்லை – Saravana Stores Elite Diamond-ல்!
ஜெனியின் அம்மா கதவைத் திறக்க செழியன் குடித்து வந்து இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார். பிறகு ஜெனி வந்ததும் ஜெனியை வீட்டிற்கு கூப்பிடுகிறார். அவருடைய அப்பா அவ எங்கேயும் வரமாட்டா என செழியனிடம் கூறுகிறார்.
ஜெனியை நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா எனவே கண்டமேனிக்கு பேச கோபமான அவருடைய அப்பா செழியனை வீட்டை விட்டு வெளியே போகச் செல்லுமாறு வெளியே அனுப்புகிறார். ஜெனி நடப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.