சமையல் ஆர்டர் எடுத்த பாக்யாவுக்கு கடைசி நேரத்தில் புதிய சோதனை வந்துள்ளது.

Baakiyalakshmi Serial Episode Update 01.10.2021 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஆயிரம் பேருக்கு சமையல் ஆர்டரை எடுத்து எல்லோருக்கும் மளிகை சாமான்களை பிரித்துக் கொடுத்து சமையல் செய்து மாலை 4 மணிக்குள் கொடுக்க சொல்லியிருந்தார் பாக்கியா. அதன்படி எல்லோரும் சமையலைச் செய்து கொண்டிருந்த நிலையில் ஒருவர் மட்டும் பொருட்களை எடுத்து வந்து திருப்பிக் கொடுத்துவிட்டு உறவினர் இறந்து விட்டதாக இதனால் ஊருக்குச் செல்வதாக கூறி விட்டு சென்றார். இதனால் என்ன செய்வது என தெரியாமல் தவித்த பாக்கியா அவரது மாமனார் பால் பாயாசம் தானே அதை நான் செய்கிறேன் என அதை அவர் செய்து முடித்தார்.

இன்றைய ராசி பலன்.! (1.10.2021 : வெள்ளிக் கிழமை)

இன்னொருவர் வந்து சர்க்கரை கருகி போயிடுச்சு என கூறி இரண்டு கிலோ சர்க்கரை வாங்கிக்கொண்டு போனார். இன்னொருவர் உளுந்து மாவு அதிகம் தண்ணீர் ஆகிடுச்சு என்ன செய்வது என கேட்டு வந்தார். இன்னொருவரின் கணவர் வந்து என் பொண்டாட்டிய எப்படி சமைக்க சொல்லலாம். இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும் என பாக்யாவின் வீட்டில் சண்டை போட்டார்.

இந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த கோபியுடன் நடந்தது எல்லாம் அவரது அம்மா சொல்ல கோபி வழக்கம்போல் திட்டி தீர்த்தார். ‌ அதன் பின்னர் ஒரு வழியாக அனைவரும் சமைத்து முடித்து விட்டு பாக்யாவின் வீட்டில் எடுத்து வந்து சேர்த்து விட்டனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு சாப்பாடு வரவில்லை என ராஜசேகர் தன்னுடைய மனைவியை போன் செய்து பார்க்குமாறு கூறுகிறார். இரண்டு முறை போன் செய்தும் பாக்கியா அவர்களது போனை எடுக்கவில்லை. இதனால் இதுக்குத்தான் தெரியாதவர்களுக்கெல்லாம் ஆர்டர் கொடுக்க கூடாது என ராஜசேகர் கோபமடைகிறார்.

இந்தப் பக்கம் வண்டி வந்து அனைத்து உணவுப் பொருட்களையும் வண்டியில் ஏற்றுகின்றனர். திட்டமிட்டபடி சமையலைச் செய்து முடித்த பாக்யாவுக்கு அனைவரும் கைதட்டி பாராட்டு தெரிவிக்கின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்‌.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.