கோர்ட்டில் நீதிபதி கேட்ட கேள்வியால் பாக்கியா ஷாக்காக கோபி வசமாக சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Baakiyalakshmi Episode Update 04.03.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாட்டு ரெக்கார்டிங்கை முடித்துவிட்டு எழிலும் அமிர்தாவும் வெளியே வந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது உங்களுக்கு என்ன ஏன் மேல அவ்வளவு அக்கறை என அமிர்தா கேட்க ஏன் என உங்களுக்கே தெரியும் நான் வேணா திரும்ப சொல்லட்டுமா என எழில் கேட்க வேண்டாம் வேண்டாம் சாமி அமிர்தா கூறுகிறார். இல்ல நான் சொல்கிறேன் என எழில் திரும்பவும் உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் ஒரு நாள் நீங்க என்ன புரிஞ்சிப்பீங்க என நினைக்கிறேன் அதுக்காகத்தான் இப்படி செய்கிறேன். இப்ப எனக்கு என்ன பயமா நாளைக்கு ஸ்ரேயா கோஷல் மாதிரி ஆயிட்டீங்கனா என்னை விட்டுப் போய்டுவீங்களே என்று பயமா இருக்கு என்று சொல்கிறார். என்ன பாத்தா விட்டுட்டு போறவங்க மாதிரி தெரியுதா என அமிர்தா கோபப்பட சும்மா சொன்னேன் என கூறுகிறார்.
இந்த பக்கம் கோர்ட்டுக்கு வந்த கோபி ஒரே பதற்றமாக இருக்கிறார். இந்த நேரத்தில் ராதிகா போன் செய்து வக்கீல் போன் பண்ணாரு உங்க போன் ரீசார்ஜ் சொன்னாரு கோர்ட்டுக்கு போய்ட்டீங்களா உங்க வைஃப் வந்திருக்காங்களா எதுவும் பிரச்சனை பண்ணலையே என கேட்கிறார். வந்திருக்கா எதுவும் பிரச்சினை பண்ணல என கோபி சொல்கிறார். சரி முடிச்சுட்டு கால் பண்ணுங்க என்று சொல்லி விட்டு ராதிகா போனை வைத்து விடுகிறார்.
இந்த பக்கம் வழக்கறிஞரின் ஜூனியர் வந்து உள்ளே அழைக்கிறார். அப்போது பாக்கியா எதற்காக இவ்வளவு பேர் வந்துருக்காங்க என கேட்க பாதி பேர் விவாகரத்து கேட்டு வந்திருக்காங்க, மீதிப்பேர் விவாகரத்துக்கு அப்புறம் இருக்க பஞ்சாயத்தை தீர்க்க வந்து இருக்காங்க என கூறுகிறார். இதனால் பாக்யாவுக்கு ஏதோ ஒருவகையில் சந்தேகம் வர நாம எதுக்குங்க வந்திருக்கோம் என கேட்கிறார். அதான் சொன்னேனே கோர்டான் எல்லாமே தான் நடக்கும் என சொல்லி சமாளித்து விடுகிறார்.
பிறகு உள்ளே போன பாக்கியா கோபியிடம் விவாகரத்து எல்லாம் ஏன் தான் பண்றாங்களோ என்னால அதெல்லாம் நினைத்துக்கூட பார்க்கமுடியலை. நீங்க இல்லாம நான் எப்படி இருப்பேன் நீங்களே சொல்லுங்க என கோபியை கேள்வி கேட்க கோபி தடுமாறுகிறார். மேலும் இவர்களுக்கு முன்னதாக வேறு ஒரு விவாகரத்து வழக்கு நடப்பதை பார்த்து பாக்கியா வருத்தப்படுகிறார். உடனே கோபி சரி வா இங்க காற்று வரல வெளியே நிற்கலாம் என வெளியே கூட்டி வந்து விடுகிறார்.
வெளியே போனது அங்கு அவருடைய வழக்கறிஞர் நின்றுகொண்டு ஏன் வெளியே வந்தீங்க உள்ள இருக்க வேண்டியதுதானே அடுத்து உங்கள தான் கூப்பிடுவாங்க என கூறுகிறார். இந்த நேரத்தில் வழக்கறிஞரின் ஜூனியர் வந்து போட்டோ கேட்கிறார். கோபி போட்டோவைக் கொடுத்து விட்டு அதை ஒட்டும் போது பாக்கியா அந்த பேப்பரை படிக்க முயற்சி செய்கிறார். உடனே கோபி அங்க பாரு என பாக்கியாவை திசைதிருப்பி யாரோ நமக்குத் தெரிஞ்சவங்க மாதிரி இருந்தாங்க என பேசி சமாளிக்கிறார்.
மேலும் பாக்கியா வழக்கறிஞரிடம் கோர்ட்டுல இவ்வளவு பேர் விவாகரத்து கேட்டால் வந்திருக்காங்க இவங்களுக்கு எல்லாம் எப்படி பெரிய மனசு வருது என பேசுவதைக் கேட்டு அவருக்கே சந்தேகம் வருகிறது. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி வீடியோ எபிசோட் முடிவடைகிறது.
இதனைத் தொடர்ந்து வெளியான ப்ரோமோ வீடியோவில் கல்யாணம் ஆகி இவ்வளவு வருஷம் ஆச்சு என நீதிபதி கேட்க 25 வருஷம் ஆச்சு என பாக்கியா கூறுகிறார். ரெண்டு பேருக்கும் இதெல்லாம் சம்மதமா என கேட்க பாக்கியா அவர் சொன்னாரு என சொல்கிறார். என்ன பிரச்சனை என கேட்க என்னங்க பிரச்சனை என பாக்கியா கோபியிடம் கேட்க கோபி திருதிருவென முழிக்கிறார்.